முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

டெல்லி எல்லையில் விவசாயிகள் மீது கண்ணீர் புகைகுண்டு வீச்சு: கலவர பூமியாக மாறிய தலைநகரம்

செவ்வாய்க்கிழமை, 26 ஜனவரி 2021      இந்தியா
Image Unavailable

Source: provided

புதுடெல்லி : அனுமதிக்கப்பட்ட நேரத்துக்கு முன்னதாகவே நுழைந்ததால் டெல்லி எல்லையில் டிராக்டர் பேரணி நடத்திய விவசாயிகள் மீது போலீசார் கண்ணீர் புகை குண்டுகளை வீசி கலைந்து போக செய்தனர். 

மத்திய அரசு கொண்டு வந்துள்ள புதிய வேளாண் சட்டங்களை ரத்து செய்யக் கோரி பஞ்சாப், அரியானா மாநில விவசாயிகள் டெல்லியின் எல்லைப் பகுதிகளில் தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

இதன் ஒரு பகுதியாக குடியரசு தினமான நேற்று டெல்லியில் பிரம்மாண்ட டிராக்டர் பேரணி நடத்தப்படும் என்று விவசாயிகள் அறிவித்திருந்தனர். 11 கட்ட பேச்சுவார்த்தை தோல்வியடைந்ததால் 62-வது நாளான நேற்று டிராக்டர் பேரணியை விவசாயிகள் நடத்தினர். இதற்காக ஆயிரக்கணக்கான டிராக்டர்களுடன் விவசாயிகள் டெல்லியில் குவிந்தனர். 

இந்நிலையில் சிங்கு எல்லையில் இருந்து டெல்லிக்குள் டிராக்டர்களுடன் விவசாயிகள் நுழைந்தனர். சஞ்சய் காந்தி டிரான்ஸ்போர்ட் நகருக்குள் நுழைந்த விவசாயிகள் மீது காவல்துறையினர் கண்ணீர் புகை குண்டுகளை வீசினர். அனுமதிக்கப்பட்ட நேரத்துக்கு முன்னதாகவே டெல்லிக்குள் நுழைந்ததாகக் கூறி விவசாயிகளை கலைக்க காவல்துறையினர் கண்ணீர் புகை குண்டுகளை வீசியதாகக் கூறப்படுகிறது. இதனால் அப்பகுதியில் பரபரப்பு நிலவியது. 

இந்நிலையில் டெல்லியில் டிராக்டர் பேரணியில் ஈடுபட்டிருந்த விவசாயிகள் டெல்லி செங்கோட்டையை முற்றுகையிட்டனர். அதை தொடர்ந்து செங்கோட்டையில் ஏறி விவசாயிகள் போராட்டம் நடத்தினர். இதனால் அந்த பகுதியில் பதற்றம் நீடித்தது. இதனால் தலைநகர் டெல்லி போர்க்களமாக காட்சியளித்தது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து