முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

விவசாயிகள் மீது பூ மழை பொழிந்து ஆதரவு தெரிவித்த டெல்லி மக்கள்

செவ்வாய்க்கிழமை, 26 ஜனவரி 2021      இந்தியா
Image Unavailable

Source: provided

புதுடெல்லி : டெல்லி எல்லைக்குள் நுழைந்த விவசாயிகள் மீது உள்ளூர் மக்கள் பூக்களைத் தூவி தங்கள் ஆதரவைத் தெரிவித்தனர். 

புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிராக 60 நாட்களுக்கும் மேலாக விவசாயிகள் தலைநகர் டெல்லியில் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்நிலையில் போராட்டத்தின் ஒருபகுதியாக குடியரசு நாளான நேற்று டெல்லியில் விவசாயிகள் இணைந்து மாபெரும் டிராக்டர் பேரணியை நடத்தினர்.  இதில் லட்சக்கணக்கான டிராக்டர்களுடன் விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். சுமார் 100 கிமீ தூரத்துக்கு பேரணி நடந்தது. 

குடியரசு தினத்தை முன்னிட்டு கட்டுப்பாடுகளுடன் போராட்டம் நடத்த காவல்துறையினர் அனுமதி அளித்தனர். காலை 11.30 மணியளளவில் பேரணியைத் துவங்கவிருப்பதாக விவசாய சங்கங்கள் அறிவித்த நிலையில் நேற்று காலை 8 மணிக்கே திக்ரி எல்லையில் போராட்டத்தைத் துவங்கினர். 

இந்நிலையில், காசிப்பூர் எல்லைக்கு அருகிலுள்ள ஸ்வரூப் நகரில் உள்ள மக்கள், அவ்வழியே வந்த விவசாயிகள் மீது மலர்களைத் தூவினர். காசிப்பூர் எல்லை - அப்ஸ்ரா எல்லை - ஹப்பூர் சாலை - ஐ.எம்.எஸ் கல்லூரி - லால் குவான் - காசிப்பூர் எல்லை பாதையில் பேரணி நடத்தினர். இதற்கிடையில் டெல்லி எல்லைகளில் பாதுகாப்பு ஏற்பாடுகளை வலுப்படுத்த, பரிதாபாத்-பல்வால் எல்லையில் டிரோன்கள் பயன்படுத்தப்பட்டு இருந்தன. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து