முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சென்னையில் பயிற்சியை தொடங்கிய இங்கிலாந்து அணி வீரர்கள்

சனிக்கிழமை, 30 ஜனவரி 2021      விளையாட்டு
Image Unavailable

Source: provided

சென்னை : கொரோனா பரிசோதனையில் இங்கிலாந்து வீரர்கள் அனைவருக்கும் கொரோனா இல்லை என்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் கூறியுள்ளது. 

சென்னையில் மூன்று இங்கிலாந்து வீரர்கள் தங்களுடைய பயிற்சியைத் தொடங்கியுள்ளதாக இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் கூறியுள்ளது. இங்கிலாந்து அணி இந்தியாவுக்குச் சுற்றுப்பயணம் செய்து 4 டெஸ்டுகள், 5 டி20, 3 ஒருநாள் ஆட்டங்களில் விளையாடுகிறது. முதல் இரு டெஸ்டுகள் சென்னையில் பிப்ரவரி 5 முதல்  9 வரையும், பிப்ரவரி 13 முதல் 17 வரையும் நடைபெறுகின்றன.

3-ஆவது டெஸ்ட் பிப்ரவரி 24 முதல் 28 வரையும், கடைசி டெஸ்ட் மார்ச் 4 முதல் 8 வரையும் ஆமதாபாதில் நடைபெறவுள்ளது. இதையடுத்து 5 ஆட்டங்கள் கொண்ட டி20 தொடர் ஆமதாபாத்திலும் 3 ஆட்டங்கள் கொண்ட ஒருநாள் தொடர் புணேவிலும் நடைபெறவுள்ளன. 

சென்னையில் இந்திய, இங்கிலாந்து அணி வீரர்களும் பயிற்சியாளர்களும் பணியாளர்களும் போட்டி நடுவர்களும் ஆறு நாள்களுக்குத் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார்கள்.

இந்நிலையில் சென்னைக்கு முன்பே வந்த பென் ஸ்டோக்ஸ், ஆர்ச்சர், பர்ன்ஸ் ஆகிய மூன்று இங்கிலாந்து வீரர்களும் தங்களுடைய தனிமைப்படுத்துதல் காலத்தை முடித்துக்கொண்டு நேற்று முதல் பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார்கள். இதர இங்கிலாந்து வீரர்கள் செவ்வாய் முதல் பயிற்சியைத் தொடங்குவார்கள் என்று இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் தகவல் அளித்துள்ளது.

மேலும் 2-வது கொரோனா பரிசோதனையில் இங்கிலாந்து வீரர்கள் அனைவருக்கும் கரோனா இல்லை என்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் கூறியுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து