முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பெங்கால் அணிக்காக விளையாடிய பந்து வீச்சாளர் அசோக் திண்டா ஓய்வு

புதன்கிழமை, 3 பெப்ரவரி 2021      விளையாட்டு
Image Unavailable

Source: provided

கொல்கத்தா : மேற்கு வங்காளத்தைச் சேர்ந்த வேகப்பந்து வீச்சாளரான அசோக் திண்டா கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றுள்ளார்.

மேற்கு வங்காளத்தின் வேகப்பந்து வீச்சாளர் அசோக் திண்டா. இவர் கடந்த 2005-ம் ஆண்டு கிரிக்கெட்டில் அறிமுகம் ஆனார். 2020 வரை பெங்கால் அணிக்காக விளையாடினார். இந்த வருடம் நடைபெற்ற சையது முஷ்டாக் அலி டிராபி டி20-யில் கோவா அணிக்காக விளையாடினார்.

இதுவரை 116 முதல்தர போட்டிகளில் விளையாடி 420 விக்கெட்டும், 98 லிஸ்ட்-ஏ போட்டிகளில் 151 விக்கெட்டுகளும், 147 டி20 போட்டிகளில் 151 விக்கெட்டும் வீழ்த்திய அசோக் திண்டா கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.  இவர் இந்திய அணிக்காக 13 ஒருநாள் போட்டிகளிலும், 9 டி20 போட்டிகளிலும் விளையாடியுள்ளார்.

ஐ.பி.எல். போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ், புனே வாரியர்ஸ், ரைசிங் புனு சூப்பர்ஜெயன்ட், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர், டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகளுக்காக 78 போட்டிகளில் விளையாடி 68 விக்கெட் வீழ்த்தியுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து