முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இந்தியாவிடம் இருந்து 110 கோடி கொரோனா தடுப்பு மருந்துகள் கொள்முதல்: யுனிசெப் அமைப்பு

வியாழக்கிழமை, 4 பெப்ரவரி 2021      உலகம்
Image Unavailable

இந்தியாவில் கடந்த ஜனவரி 16-ந் தேதி முதல் கொரோனா தடுப்பூசி போடும் பணிகள் நடந்து வருகின்றன. முதற்கட்டத்தில் முன்கள பணியாளர்களுக்கும், பின்னர் 50 வயது கடந்த முதியவர்களுக்கும் என வழிமுறைகளின்படி தடுப்பூசிகள் போட திட்டமிடப்பட்டு செயல்படுத்தப்பட்டு வருகிறது. 

இதுதவிர வங்காளதேசம், மாலத்தீவுகள், ஆப்கானிஸ்தான், இலங்கை, பூடான், நேபாளம் உள்ளிட்ட அண்டை நாடுகளுக்கும் கொரோனா தடுப்பூசிகளை இந்தியா வினியோகம் செய்து வருகிறது. 

இந்நிலையில் குறைந்த வருவாய் கொண்ட 100 நாடுகளுக்கு வேண்டிய 110 கோடி கொரோனா தடுப்பு மருந்துகளை இந்தியாவிடம் இருந்து யுனிசெப் அமைப்பு கொள்முதல் செய்கிறது. 

கொரோனா தடுப்பு மருந்துகள் பற்றிய செய்தியாளர்கள் சந்திப்பில் யுனிசெப் அமைப்பின் தலைவர் ஹென்ரீட்டா போர் கூறியபோது கொரோனா தடுப்பு மருந்துகளுக்காக இந்தியாவின் சீரம் அமைப்புடன் நீண்டகால வினியோக ஒப்பந்தம் போடப்பட்டு உள்ளது. 

இதன்படி குறைவான மற்றும் நடுத்தர வருவாய் கொண்ட 100 நாடுகளுக்காக தலா 3 அமெரிக்க டாலர்கள் (ரூ.218) மதிப்பிலான 110 கோடி கொரோனா தடுப்பு மருந்துகளை யுனிசெப் அமைப்பு கொள்முதல் செய்ய உள்ளது என தெரிவித்து உள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து