சென்னை : தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்துக்குள் கோவை, நீலகிரி,தேனி, திண்டுக்கல்லில் ஓரிரு இடங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.
அரபிக் கடலில் தென்கிழக்கு மத்திய கிழக்கு பகுதியில் வளிமண்டல சுழற்சி எதிரொலியாக 4 மாவட்டத்தில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக கூறப்பட்டுள்ளது.
கேரளாவின் வடக்கு பகுதி மற்றும் அதனை ஒட்டிய கடலோர பகுதிகளில், வளி மண்டல மேலடுக்கு சுழற்சி ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக, வட மாவட்டங்களில், லேசான மழை பெய்யலாம். தமிழகத்தில் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய பகுதிகளில், ஒரு சில இடங்களில், லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது.
இன்று முதல் 26-ம் தேதி வரை தமிழகம், புதுவையில், பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவும். சென்னையில் வானம் மேகமூட்டமாக காணப்படும். ஒரு சில இடங்களில், லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது. மீனவர்களுக்கான எச்சரிக்கை எதுவும் இல்லை. இவ்வாறு வானிலை மையம் தெரிவித்துள்ளது.