முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நைஜீரியாவில் உணவகத்தில் மனித இறைச்சி சமைத்து விற்ற பெண் கைது

வெள்ளிக்கிழமை, 5 மார்ச் 2021      உலகம்
Image Unavailable

நைஜீரியாவின் அனாம்ப்ரா மாகாணத்தில் உணவகம் நடத்தி வந்த ஒரு பெண்ணை போலீசார் கைது செய்தனர். உலகிலேயே குற்றச்சம்பவங்கள் அதிகம் நடக்கும் நாடுகளில் ஒன்று நைஜீரியா, இதற்கு முக்கிய காரணங்கள் வறட்சி, பஞ்சம், ஏழ்மை ஆகும். இந்தநிலையில் அனாம்ப்ரா மாகாணத்தில் உள்ள குறிப்பிட்ட உணவகத்தில் மனித இறைச்சி விற்கப்படுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது. 

இதனையடுத்து திடீரென போலீசார் உணவகத்தில் சோதனை நடத்தியுள்ளனர். இந்த சோதனையின் போது மனித இறைச்சி விற்கப்படுவது கண்டறியப்பட்டது. இறைச்சிக்காக பயன்படுத்தப்பட்ட மனித உடல் பாகங்களையும் சமைக்க தயாராக இருந்த இறைச்சியையும் போலீசார் கண்டுபிடித்துள்ளனர். 

மேலும் உணவகத்தை நடத்தி வந்த பெண்ணை போலீசார் கைது செய்துள்ளனர். இறைச்சிக்காக நபர் கொல்லப்பட்டரா அல்லது அது இறந்தவர்களின் உடலா என்பது குறித்த தகவலை போலீசார் வெளியிடவில்லை.2015 ஆம் ஆண்டு இதே அனாம்ப்ரா மாகாணத்தில் உள்ள உணவகம் ஒன்றில் மனித இறைச்சி விற்கப்பட்டதை போலீசார் கண்டுபிடித்தனர். இக்கொடூர செயலில் ஈடுபட்ட 10 பேரை கைது செய்தனர் என்பது நினைவுக் கூரத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து