எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
தி.மு.க. கூட்டணியில் 3-வது நாளாக காங்கிரஸ், கம்யூனிஸ்ட், ம.தி.மு.க. தொகுதி பங்கீட்டில் இழுபறி நீடித்து வருகிறது.
தி.மு.க. கூட்டணியில் மனிதநேய மக்கள் கட்சிக்கு 2 இடங்களும், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சிக்கு 3 இடங்களும், விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு 6 தொகுதிகளும் ஒதுக்கப்பட்டுள்ளன.
காங்கிரஸின் நிலை
காங்கிரஸ் கடந்த 2016 பொதுத்தேர்தலின் போது 41 இடங்களில் போட்டியிட்டது. ஆனால் 8 இடங்களில் தான் வெற்றி பெற்றது. இதனால் இந்த தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கு குறைந்த தொகுதிகளை ஒதுக்க தி.மு.க. முடிவு செய்துள்ளது.
அதன் அடிப்படையில், தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ். அழகிரி தலைமையிலான குழுவினர் அண்ணா அறிவாலயத்திற்கு பேச்சுவார்த்தை நடத்த சென்ற போது 18 தொகுதிகள் வரையே ஒதுக்க முடியும் என தி.மு.க. தரப்பில் கூறப்பட்டது. இது காங்கிரசாருக்கு பெரும் அதிர்ச்சியை கொடுத்தது. 50 தொகுதிகளுக்கான பட்டியலை நாங்கள் வைத்துள்ளோம். நீங்கள் 18 தொகுதிகளில் இருந்து பேச்சுவார்த்தையை தொடங்குகிறீர்களே என்று காங்கிரசார் வருத்தப்பட்டனர்.
இந்த நிலையில் காங்கிரஸ் இடையே நடைபெற்ற 2-ம் கட்டப் பேச்சில் 22 முதல் 24 தொகுதிகள் வரை காங்கிரஸுக்கு ஒதுக்குவதாக கூறப்பட்டது. ஆரம்பத்தில் எடுத்த முடிவில் இருந்து தி.மு.க. பின்வாங்கவில்லை. ஆனால் 35 தொகுதிகள் வரை காங்கிரஸ் கேட்டது.
இதனால் தி.மு.க. அளிக்கும் தொகுதிகளை பெற்றுக்கொண்டு தேர்தலை சந்திக்கலாமா? அல்லது வேறு முடிவுகளை எடுக்கலாமா? என்பது குறித்து மாநில நிர்வாகிகள், மாவட்ட தலைவர்கள், எம்.பி., எம்.எல்.ஏ.க்களுடன் காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் தினேஷ்குண்டுராவ் சென்னை சத்தியமூர்த்தி பவனில் தனித்தனியாக கருத்துகளை கேட்டறிந்தார்.
நிர்வாகிகளில் பலர் கவுரவமான எண்ணிக்கையில் தொகுதி கிடைக்காத பட்சத்தில் தி.மு.க. கூட்டணியில் இருந்து வெளியேற தயங்கக்கூடாது. தனித்து போட்டியிட்டு நமது பலத்தை காண்பிக்கலாம். காங்கிரஸ் தொண்டர்கள் எதற்கும் தயாராக உள்ளனர் என்று கூறியுள்ளனர்.
தொகுதிப் பங்கீட்டில் இழுபறி நீடித்து வருவதால், சென்னை சத்தியமூர்த்தி பவனில் நேற்று தமிழக காங்கிரஸ் கட்சியின் செயற்குழு உறுப்பினர்களுடன் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இந்த ஆலோசனையில் தினேஷ் குண்டுராவ், வீரப்ப மொய்லி, கே.எஸ். அழகிரி உள்ளிட்டோர் பங்கேற்றனர். சுமார் ஒரு மணிநேரம் இந்த ஆலோசனை நடைபெற்றது.
தற்போது தி.மு.க. 25 தொகுதிகள் வழங்க முன் வந்துள்ளதாகவும், 27 தொகுதிகள் ஒதுக்குமாறு காங்கிரஸ் இறங்கி வந்துள்ளதாகவும் தெரிகிறது. தி.மு.க. – காங்கிரஸ் கூட்டணியின் அடுத்த கட்ட பேச்சுவார்த்தை விரைவில் தொடங்கும். என வீரப்பமொய்லி தெரிவித்தார்.
ம.தி.மு.க.
தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தையின்போது ம.தி.மு.க. 10 தொகுதிகள் வரை கோரியிருந்த நிலையில், 6 தொகுதிகள் வரையே ஒதுக்க முடியும் என தி.மு.க. தரப்பில் கூறப்பட்டது. தி.மு.க. – ம.தி.மு.க. 2 முறை பேச்சுவார்த்தை நடைபெற்ற நிலையில், அதில் உடன்பாடு ஏதும் எட்டப்படவில்லை.
இந்த நிலையில் சென்னை எழும்பூரில் உள்ள கட்சி அலுவலகத்தில் தொகுதி பங்கீடு தொடர்பாக கட்சி நிர்வாகிகளுடன் ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ ஆலோசனை நடத்தினார். சுமார் ஒரு மணி நேரம் இந்த ஆலோசனை நடைபெற்றது. பின்னர் வைகோ செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், 3-ம் கட்டப் பேச்சுவார்த்தைக்கு தி.மு.க. இன்னும் அழைக்கவில்லை. விடுதலை சிறுத்தை கட்சியை தி.மு.க. கவுரவமாக நடத்தி உள்ளது. ஆனாலும் கமலஹாசன் தலைமையிலான 3-வது அணிக்கு ம.தி.மு.க. செல்லாது என்றும் அவர் கூறினார்.
கம்யூனிஸ்ட்
தொகுதிப் பங்கீடு தொடர்பாக தி.மு.க.வுடன் கம்யூனிஸ்ட் கட்சி மீண்டும் ஆலோசனையில் ஈடுபட்டுள்ளது. மாநிலச் செயலாளர் முத்தரசன், மூத்த தலைவர் நல்லக்கண்ணு ஆகியோர் தொடர்ந்து தி.மு.க.வுடனான ஆலோசனையில் ஈடுபட்டுள்ளனர்.
பேச்சுவார்த்தையில் 6 தொகுதிகள் வரையே ஒதுக்க முடியும் என தி.மு.க. தரப்பில் கூறப்பட்டது. ஆனால் கம்யூனிஸ்ட் தொடர்ந்து இரட்டை இலக்கு எண்ணில் தொகுதிகளை கோரி வருகிறது.
ஏற்கெனவே 2 முறை பேச்சுவார்த்தை நடைபெற்ற நிலையில், அதில் உடன்பாடு ஏதும் ஏற்படவில்லை. இதனையடுத்து நேற்று 3-வது முறையாக தி.மு.க.வுடன் கம்யூனிஸ்ட் கட்சி பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளது.
குறைந்த தொகுதிகளை ஒதுக்குவது ஏன்?
ஒவ்வொரு கூட்டணி கட்சிகளுக்கும் தி.மு.க. குறைந்த தொகுதிகளை ஒதுக்குவது ஏன்? என்பது குறித்து நிர்வாகி ஒருவர் கூறியதாவது:–
கடந்த 2006 தேர்தலின் போது தி.மு.க.வுக்கு முழு மெஜாரிட்டி கிடைக்கவில்லை. காங்கிரஸ் ஆதரவுடன் தான் ஆட்சி அமைத்தது. இதற்கு காரணம் தி.மு.க. 160 தொகுதிகளுக்கு கீழே நின்றதால் தான் மெஜாரிட்டியை பெற முடியாமல் போனது. தி.மு.க. ஆட்சியைப் பார்த்து மைனாரிட்டி அரசு என்று அப்போது எதிர்க்கட்சியான அ.தி.மு.க. கூறிவந்தது. பெரும்பான்மையை பெற தவறியதற்கு குறைந்த இடங்களில் போட்டியிட்டதே காரணம் என்பது தெரியவந்தது.
மேலும் கூட்டணி கட்சிகளுக்கு அதிக இடங்களை ஒதுக்கினால் அந்த தொகுதிகளில் எளிதாக எதிர்கட்சிகள் வெற்றி பெற்று விடுகின்றன. அவரவர் சின்னத்தில் நிற்பதால் வெற்றி வாய்ப்பும் குறைவதாக கருதியதால் தான் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட வலியுறுத்தப்பட்டு வருகிறது என்றார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
ஸ்வீட் உருளைக்கிழங்கு கேக்1 day 39 sec ago |
பெப்பர் சிக்கன்5 days 24 min ago |
ஹனி பட்டர் சிக்கன்1 week 1 day ago |
-
மாஸ்கோ தாக்குதல் பின்னணியில் அமெரிக்கா, இங்கிலாந்து, உக்ரைன் ரஷ்ய உளவுத்துறை தலைவர் குற்றச்சாட்டு
27 Mar 2024மாஸ்கோ, மாஸ்கோவில் நடத்தப்பட்ட தாக்குதல் பின்னணியில் உக்ரைன், அமெரிக்கா, இங்கிலாந்து இருப்பதாக ரஷ்யாவின் உளவுத்துறை தலைவர் அலெக்சாண்டர் போர்ட்னிகோவ் தெரிவித்துள்ளார்
-
சக்தியின் வடிவம்: மே.வங்க பா.ஜ.க. வேட்பாளரை பாராட்டிய பிரதமர் மோடி
27 Mar 2024புது டெல்லி, மேற்கு வங்கத்தில் போட்டியிடும் பா.ஜ.க.வேட்பாளர் ரேகா பத்ராவை சக்தியின் வடிவம் என்று பிரதமர் மோடி பாராட்டியுள்ளார்.
-
தமிழகத்தில் 31-ம் தேதி வரை வறண்ட வானிலை நிலவும் : சென்னை வானிலை மையம் தகவல்
27 Mar 2024சென்னை : தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் இன்று முதல் 31-ம் தேதி வரை வறண்ட வானிலை நிலவக்கூடும் என்று சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.
-
தேர்தல் ஆணைய கருத்தை ஏற்கிறோம்: ம.தி.மு.க.வுக்கு பம்பரம் சின்னம் ஒதுக்க உத்தரவிட முடியாது : வழக்கை தள்ளுபடி செய்து ஐகோர்ட் உத்தரவு
27 Mar 2024சென்னை, ம.தி.மு.க.வுக்கு பம்பரம் சின்னம் ஒதுக்க தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிட முடியாது என்று வழக்கை தள்ளுபடி செய்து சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.
-
பாராளுமன்ற தேர்தல் பிரசாரத்தை பயன்படுத்தி தமிழ்நாட்டில் நாச வேலைக்கு பயங்கரவாதிகள் சதி திட்டம்? மத்திய உளவுத்துறை எச்சரிக்கை கடிதம்
27 Mar 2024சென்னை, பாராளுமன்ற தேர்தல் பிரசாரத்தை பயன்படுத்தி தமிழ்நாட்டில் நாச வேலைக்கு பயங்கரவாதிகள் சதி திட்டம் தீட்டியுள்ளதாக மத்திய உளவுத்துறை மாநிலங்களுக்கு எச்சரிக்கை கடிதம்
-
சிதம்பரம் தொகுதியில் போட்டியிட திருமாவளவன் வேட்புமனு தாக்கல் : தேர்தல் ஆணையம் சுதந்திரமாக இயங்குவதாக தெரியவில்லை என பேட்டி
27 Mar 2024அரியலூர் : சிதம்பரம் தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலரும், அரியலூர் மாவட்ட கலெக்டருமான ஆனிமேரி ஸ்வர்ணாவிடம் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல் திருமாவளவன் நேற்று தன
-
பாராளுமன்ற தேர்தல்: எடப்பாடி பிரச்சார சுற்றுப்பயணத்தில் மாற்றம்
27 Mar 2024சென்னை : பாராளுமன்ற தேர்தலையொட்டி அ.தி.மு.க.
-
பாராளுமன்ற தேர்தல்: சிவசேனா உத்தவ் தாக்கரே அணி சார்பில் முதற்கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு
27 Mar 2024மும்பை, பாராளுமன்ற மக்களவை தேர்தலுக்கான 16 பேர் கொண்ட முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை சிவசேனா உத்தவ் தாக்கரே அணி வெளியிட்டுள்ளது.
-
பிரபஞ்ச அழகி போட்டியில் முதல் முறையாக சவுதி பங்கேற்பு
27 Mar 2024ரியாத், சவுதி அரேபியா முதல் முறையாக பிரபஞ்ச அழகி போட்டியில் பங்கேற்க உள்ளது.
-
மதுரையில் அ.தி.மு.க.வேட்பாளர் டாக்டர் சரவணை ஆதரித்து பழங்காநத்தத்தில் இன்று எடப்பாடி பிரச்சாரம் செய்கிறார் : முன்னாள் அமைச்சர் செல்லூர் கே.ராஜூ எம்.எல்.ஏ. அறிக்கை
27 Mar 2024மதுரை : மதுரையில் அ.தி.மு.க.வேட்பாளர் டாக்டர் சரவணை ஆதரித்து பழங்காநத்தத்தில் இன்று எடப்பாடி பிரச்சாரம் செய்கிறார் என்று முன்னாள் அமைச்சர் செல்லூர் கே.ராஜூ எம்.எல்.ஏ.
-
தமிழகத்தில் மேலும் 2 சுங்கச்சாவடிகளில் ஏப்ரல் 1-ம் தேதி முதல் கட்டணம் உயர்வு
27 Mar 2024சென்னை, சென்னை புறநகரில் உள்ள 2 முக்கிய சுங்கச்சாவடிகளில் கட்டணம் உயர்த்தப்படுவதாக நெடுஞ்சாலைத்துறை ஆணையம் அறிவித்துள்ளது.
-
பாராளுமன்ற தேர்தல்: தமிழகத்தில் வேட்புமனு தாக்கல் நிறைவடைந்தது; 900-க்கும் அதிகமான வேட்பாள்கள் மனுத்தாக்கல் வேட்புமனுக்கள் மீது இன்று பரிசீலனை
27 Mar 2024சென்னை, பாராளுமன்ற தேர்தலில் தமிழ்நாட்டில் வேட்புமனு தாக்கல் நேற்றோடு நிறைவடைந்தது.
-
சத்தீஷ்கரில் படையினருடன் மோதல்: நக்சலைட்டுகள் 6 பேர் சுட்டு கொலை
27 Mar 2024பிஜாப்பூர், சத்தீஸ்கர் மாநிலத்தின் பிஜாப்பூரில் நேற்று பாதுகாப்புப் படையினருடன் நடந்த மோதலில் இரண்டு பெண்கள் உட்பட 6 நக்சல்கள் உயிழந்தனர். பலர் காயமடைந்திருக்கலா
-
மதுபான கொள்கை முறைகேடு வழக்கு: இன்று எனது கணவர் நீதிமன்றத்தில் உண்மைகளை வெளியிடுவார்: கெஜ்ரிவால் மனைவி பேட்டி
27 Mar 2024புது டெல்லி, டெல்லி மதுபான கொள்கையில் முறைகேடு நடந்ததாக சொல்லப்படும் வழக்கில் இன்று (வியாழக்கிழமை) தனது கணவர் நீதிமன்றத்தில் உண்மைகளை வெளியிடுவார் என்று அரவிந்த் கெஜ்ரி
-
பார்லி. தேர்தல்: கோவையில் அண்ணாமலை மனுத்தாக்கல்
27 Mar 2024கோவை : பாராளுமன்ற தேர்தலையொட்டி பா.ஜ.க.
-
ராமநாதபுரத்தில் பன்னீர்செல்வம் பெயரில் மேலும் ஒருவர் போட்டி
27 Mar 2024ராமநாதபுரம், ராமநாதபுரத்தில் ஒரே பெயரில் போட்டியிடும் சுயேட்சை வேட்பாளர்களின் எண்ணிக்கை 6 ஆக உயர்ந்துள்ளது.
-
ரஷ்ய ராணுவத்தில் சேர்க்கப்பட்ட 2 கேரள இளைஞர்கள் நாடு திரும்ப ஏற்பாடு: மத்திய அரசு
27 Mar 2024திருவனந்தபுரம், ரஷ்ய ராணுவத்தில் சேர்க்கப்பட்ட கேரளாவைச் சேர்ந்த 4 இளைஞர்களில் 2 பேர் நாடு திரும்ப ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக மத்திய வெளியுறவுத்துறை இணை அமைச்சர் வி.
-
நீலகிரி தி.மு.க. வேட்பாளர் ஆ.ராசா வேட்புமனு தாக்கல்
27 Mar 2024நீலகிரி, நீலகிரி தொகுதியில் தி.மு.க. வேட்பாளர் ஆ.ராசா நேற்று வேட்புமனு தாக்கல் செய்தார்.
-
கைது நடவடிக்கைக்கு எதிராக கெஜ்ரிவாலின் மனு மீது பதிலளிக்க அவகாசம் கோரிய அமலாக்கத்துறை
27 Mar 2024புதுடெல்லி : கைது நடவடிக்கைக்கு எதிராக கெஜ்ரிவால் தாக்கல் செய்த மனு தொடர்பாக பதிலளிக்க 3 வாரங்கள் அவகாசம் வழங்குமாறு அமலாக்கத்துறை கோரிக்கை விடுத்துள்ளது.
-
வி.சி.க.வுக்கு பானை சின்னம் வழங்க தலைமை தேர்தல் ஆணையம் மறுப்பு
27 Mar 2024புதுடெல்லி : பாராளுமன்ற தேர்தலில் விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு பானை சின்னம் வழங்க இந்திய தேர்தல் ஆணையம் மறுப்பு தெரிவித்து உள்ளது.
-
மைக்ரோசாப்ட் விண்டோஸ் தலைவரான சென்னை ஐ.ஐ.டி. முன்னாள் மாணவர்
27 Mar 2024நியூயார்க் : மைக்ரோசாப்ட் விண்டோஸ் மற்றும் சர்போஸின் புதிய தலைவராக சென்னை ஐ.ஐ.டி. முன்னாள் மாணவரான பவன் டவுலூரி என்பவர் நியமிக்கப்பட்டுள்ளார்.
-
சிவசேனா உத்தவ் தாக்கரே அணியின் 16 பேர் அடங்கிய முதற்கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு
27 Mar 2024மும்பை, மராட்டியத்தில் சிவசேனா உத்தவ் தாக்கரே அணி சார்பில் 16 பேர் கொண்ட முதற்கட்ட வேட்பாளர் பட்டியல் நேற்று வெளியிடப்பட்டுள்ளது.
-
வான்வழி தாக்குதலில் 15 பேர் பலி: சிரியாவின் குற்றச்சாட்டுக்கு அமெரிக்கா திட்டவட்ட மறுப்பு
27 Mar 2024டமாஸ்கஸ், சிரியாவில் அமெரிக்கா நடத்திய வான்வழி தாக்குதலில் 15 பேர் பலியானதாக கூறப்பட்டுள்ளது.
-
சிறையிலிருந்து டெல்லி அரசு இயங்காது: துணை நிலை கவர்னர்
27 Mar 2024புது டெல்லி, சிறையிலிருந்து டெல்லி அரசு இயங்காது என்பதை டெல்லி மக்களிடம் உறுதியாக என்னால் கூற முடியும் என்று டெல்லி துணை நிலை கவர்னர் வி.கே.சக்சேனா தெரிவித்துள்ளார்.
-
சிவகாசியில் விஜயகாந்த் மகனை ஆதரித்து எடப்பாடி இன்று பிரச்சாரம்
27 Mar 2024சிவகாசி : பாராளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க. கூட்டணியில் இடம்பெற்றுள்ள தே.மு.தி.க.