முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பாகிஸ்தான் பாராளுமன்றத்தில் நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பில் இம்ரான்கான் அரசு வெற்றி

சனிக்கிழமை, 6 மார்ச் 2021      உலகம்
Image Unavailable

பாகிஸ்தான் பாராளுமன்றத்தில் நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பில் இம்ரான் கான் அரசு வெற்றி பெற்றது.

பாகிஸ்தானில் அண்மையில் நடைபெற்ற செனட் சபை(மேலவை) தோ்தலில், ஆளும் பாகிஸ்தான் தெஹ்ரீக் - இ - இன்சாப் கட்சியின்(பி.டி.ஐ) வேட்பாளரும், நிதியமைச்சருமான அப்துல் ஹபீஸ் ஷேக்கை, பாகிஸ்தான் ஜனநாயக இயக்க(பி.டி.எம்) கூட்டணி வேட்பாளரும் முன்னாள் பிரதமருமான யூசுப் ராஸா கிலானி தோற்கடித்தாா். இந்த தோல்வி, பிரதமா் இம்ரான்கானுக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது. இதையடுத்து, பிரதமா் பதவி விலக வேண்டும் என்று எதிா்க்கட்சிகள் நெருக்கடி கொடுக்கத் தொடங்கின.  இதனால்,  தனது அரசு மீது நம்பிக்கை வாக்கெடுப்பு கோர இருப்பதாக இம்ரான் கான் அறிவித்தாா். 

கடந்த வியாழன்று மாலை தொலைக்காட்சி வழியாக நாட்டு மக்களுக்கு உரையாற்றிய இம்ரான் கான், நம்பிக்கை வாக்கெடுப்பு கோருவது பற்றிய அறிவிப்பை வெளியிட்டார். மேலும்,  பி.டி.ஐ. கட்சியைச் சோ்ந்த  தேசிய  சபை  உறுப்பினா்கள் தவறாது கலந்து கொண்டு எனக்கு ஆதரவு அளிக்க வேண்டும் எனக்கூறியிருந்தார்.  இதன்படி நேற்று  காலை  பாகிஸ்தானின் தேசிய அவை கூடியது. நம்பிக்கை வாக்கெடுப்பை புறக்கணித்து எதிர்க்கட்சி கூட்டணிகள் வெளிநடப்பு செய்தன. இதனால், 342- உறுப்பினர்களை கொண்ட  தேசிய சபையில் 178-வாக்குகளை பெற்று தனது அரசுக்கு பெரும்பான்மையை இம்ரான் கான் நிரூபித்தார். பாகிஸ்தான் தேசிய சபையில் பெரும்பான்மைக்கு 172 வாக்குகள் தேவை என்ற நிலையில் அதை விட கூடுதலான ஆதரவுடன் இம்ரான் கான் அரசு நம்பிக்கை வாக்கெடுப்பில் வென்றது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து