முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அ.தி.மு.க மகளிர் அணியின் சார்பில் சர்வதேச மகளிர் தினம் கொண்டாட்டம்: துணை முதல்வர் ஓ.பி.எஸ். கேக் வெட்டினார்

திங்கட்கிழமை, 8 மார்ச் 2021      தமிழகம்
Image Unavailable

சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு அ.தி.மு.க. தலைமை அலுவலகத்தில் நேற்று மகளிரணி சார்பில் மகளிர் தினம் கோலாகலமாக கொண்டாடப்பட்டது. இதில் துணை முதல்வர் ஓ. பன்னீர் செல்வம் கலந்து கொண்டு கேக் வெட்டி அனைவருக்கும் வழங்கினார். 

சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு, அ.தி.மு.க. மகளிர் அணியின் சார்பில், தலைமைக் கழகத்தில் நேற்று காலை (8.3.2021 - திங்கட் கிழமை) நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக வருகை தந்த, கட்சியின் ஒருங்கிணைப்பாளர், துணை முதல்வருமான ஓ. பன்னீர்செல்வத்தை தலைமைக் கழக வளாகத்தில் பெருந்திரளாகத் திரண்டிருந்த மகளிர் பூச்செண்டுகள் வழங்கி உற்சாகத்துடன் வரவேற்றனர்.  

மகளிர் அணியினர் அளித்த வரவேற்பை இன்முகத்தோடு ஏற்றுக் கொண்ட துணை முதல்வர் ஓ. பன்னீர் செல்வம், மகளிர் அணியின் சார்பில் தயார் செய்யப்பட்டிருந்த கேக்கினை வெட்டி அனைவருக்கும் வழங்கினார்.  

இந்நிகழ்ச்சியில், கட்சியின் துணை ஒருங்கிணைப்பாளர்கள் கே.பி. முனுசாமி, வைத்திலிங்கம் எம்.பி. ஆகியோரும் கலந்து கொண்டனர்.     சர்வதேச மகளிர் தின விழாவை சிறப்பாகக் கொண்டாடுவதற்கான ஏற்பாடுகளை, அ.தி.மு.க. மகளிர் அணிச் செயலாளரும், மாநிலங்களவைக் குழு கொறடாவுமான விஜிலா சத்தியானந்த், மகளிர் அணி இணைச் செயலாளர் கீர்த்திகா முனியசாமி, மகளிர் அணி இணைச் செயலாளரும், அமைச்சருமான டாக்டர் ஏ. சரோஜா ஆகியோர் செய்திருந்தனர்.   இந்நிகழ்ச்சியில் பல்வேறு பொறுப்புகளில் பணியாற்றி வரும் மகளிரணியினர், நிர்வாகிகள், தொண்டர்கள் பலரும் பெருமளவில் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.  மேலும், அ.தி.மு.க. தலைமை அலுவலகம் அமைந்துள்ள பகுதியில், சாலையின் இரு மருங்கிலும் கட்சிக் கொடித் தோரணங்கள் அழகுற அமைக்கப்பட்டு, செண்டை மேளம் முழங்க எழுச்சிமிகு வரவேற்பு வழங்கப்பட்டது.  

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து