முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இந்திய அணியில் இடம் பிடிக்காதது குறித்து வேதனையை வெளிப்படுத்திய பிரித்வி ஷா

சனிக்கிழமை, 13 மார்ச் 2021      விளையாட்டு
Image Unavailable

Source: provided

மும்பை : இந்திய கிரிக்கெட் அணியின் இளம் தொடக்க வீரர் பிருத்வி ஷா மோசமான பார்ம் காரணமாக அடிலெய்ட் டெஸ்டுக்கு பிறகு அணியில் இடம் பெற முடியாமல் தவித்து வருகிறார். இந்நிலையில் அந்த அனுபவத்தை பகிர்ந்துள்ளார் பிருத்வி ஷா. 

“அன்று நான் டென்ஷனாக இருந்தேன். எதற்குமே உபயோகமற்றவனாக உணர்ந்தேன். நான் என் அறைக்குச் சென்று மனம் உடைந்து அழுதேன். ஏதோ தப்பாக நடப்பது போல தெரிந்தது. அந்த தவறுக்கான பதிலை உடனடியாக நான் தேடியாக வேண்டும்” என ஆஸ்திரேலிய தொடரில் அணியில் இடம் பெற முடியாத வேதனையை பகிர்ந்துள்ளார் பிருத்வி ஷா. 

அடிலெய்ட் டெஸ்டில் ஷா முதல் இன்னிங்ஸில் டக் அவுட்டும், இரண்டாவது  இன்னிங்ஸில் 4 ரன்களையும் எடுத்திருந்தார். தற்போது விஜய் ஹசாரே கோப்பைக்கான தொடரில் அசத்தலாக ஆடி வருகிறார் ஷா. இந்த தொடரில் 7 போட்டிகளில் 754 ரன்கள் விளாசியுள்ளார் பிருத்வி ஷா.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து