எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
மதுரை மாவட்டம் மேலூர் பேருந்து நிலையம் முன்பு அ.தி.மு.க. வேட்பாளர் பெரியபுள்ளானை ஆதரித்து தமிழக முதல்வரும், அ.தி.மு.க.வின் இணை ஒருங்கிணைப்பாளருமான எடப்பாடி பழனிச்சாமி பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.
முன்னதாக அவருக்கு கலைநிகழ்ச்சிகள், விளம்பர பதாகைகள் , தோரணங்கள் வைத்து உற்சாக வரவேற்பளிக்கப்பட்டது. ஏராளமான அ.தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சியினர் பொதுமக்கள் கூடியிருந்தனர். அப்போது மேலூர் வேட்பாளரை ஆதரித்து வேனில் இருந்தபடியே பேசிய எடப்பாடி பழனிச்சாமி பேசுகையில்,
கிராமம் சூழ்ந்த பகுதியான மேலூர் ஏற்றம் அடைய வேண்டும் என பலமுறை தற்போதைய வேட்பாளர் பெரியபுள்ளான் கோரிக்கை மனுவை என்னிடம் அளித்தவர். கிராம பகுதியாக உள்ள இப்பகுதிக்கு தண்ணீர் மிக முக்கியமான ஒன்று, விவசாயம் செய்ய நீர் மேலாண்மை திட்டத்தை கொண்டு வந்து, இந்தியாவில் சிறந்த மாநிலமாக தமிழகம் நீர்மேலாண்மையில் விருது வாங்கியுள்ளோம். நீர்நிலைகளை தூர்வாரி, வேளாண் பணி இந்தாண்டு சிறப்படைந்துள்ளது.
50 ஆண்டுகளில் மேட்டூர், முல்லை பெரியாறு அணை இரண்டும் நிரம்பியது இந்தாண்டு தான். ஆனால் ஸ்டாலின் செல்லும் இடமெல்லாம் பொய் பேசுகின்றார். விழுப்புரம் கூட்டத்தில் என்னை பற்றியே பேசி விட்டு செல்கின்றார். விவசாயிக்கும், நாட்டு மக்களுக்கும் என்ன தேவை என்பதனை நாங்கள் தான் செய்து வருகின்றோம்.
விவசாயியும் ரவுடியும் ஒன்னா..! விவசாயியை கொச்சைபடுத்தி ஸ்டாலின் பேசுகின்றார். நான் விவசாயி என்று கூறும் போது ஸ்டாலின் பொங்கி எழுகின்றார். நாட்டின் முதுகெழும்பு விவசாயி, ஸ்டாலின் விவசாயிகளை கொச்சைபடுத்தி பேசினார் அப்படி பேசினால் எதிர்கட்சி கூட அவருக்கு கிடைக்காது. விவசாயிகள் என்றால் தீண்டத்தாகவர் போல ஸ்டாலின் நினைக்கின்றார்.
முன்னாள் அமைச்சர் தி.மு.க.வை சேர்ந்த ஆ.ராசா. அவர் செய்த அட்டூழியம் கொஞ்சம் நஞ்சமல்ல. ஸ்டாலின் அணிந்திருக்க செருப்பை விட ஒரு ரூபாய் குறைந்தவன் நான் என என்னை விமர்சனம் செய்கின்றார். அவர் ஒரு லட்சத்து 74 ஆயிரம் கோடி ஊழல் செய்தவர் அவர். ஆனால் நான் விவசாயியாக இருக்கின்றேன். கண்ணுக்கு தெரியாத காற்றையே ஊழல் செய்தவர்கள் தான் அவர்கள். அவர்களுக்கு தகுந்த பதிலடி கொடுங்கள். விவசாயிகளிடம் எங்களுடைய மதிப்பு உயர்ந்து கொண்டு வருகின்றது. இதனை நாங்கள் பெருமையாக கருதுகின்றோம். வீட்டுக்கு அடங்காத பிள்ளை ஊருக்கு அடங்கும். ஒருவரை சிறுமைப்படுத்தி பேசுவதால் அவர்களுக்கு சறுக்கல் ஏற்படாது. நன்மதிப்பு தான் ஏற்படும். தரங்கெட்ட வார்த்தைகளை பயன்படுத்தும் கட்சி தி.மு.க. நாட்டு மக்களுக்காக தி.மு.க. இல்லை. தி.மு.க. என்பது வெறும் கம்பெனி. வாரிசு அரசியலை செய்கின்றனர். கொள்ளையடிப்பதில் தி.மு.க.வினர் மன்னர்கள். தி.மு.க. அராஜக, ரவுடி கட்சி அவர்கள் ஆட்சிக்கு வந்தால் உங்கள் சொத்து உங்களிடம் இருக்காது.. நாட்டையே பட்டா போட்டு விடுவார்கள்..
அதிகாரிகளையும், டி.ஜி.பி.யையும் உதயநிதி ஸ்டாலின் மிரட்டுகின்றார். காவல்துறையின் உச்சபட்ச அதிகாரியை மிரட்டுகின்றனர் என்றால் நாட்டு மக்கள் எப்படி நிம்மதியாக வாழ முடியும். கட்டபஞ்சாயத்து, ரவுடிசம் தி.மு.க. வந்தால் தலைதூக்கி விடும். சாதிசண்டை, மதசண்டை இல்லாமல் நிம்மதியாக வாழ்கின்றோம். தி.மு.க. வந்தால் நாடு தங்காது..
எம்.ஜி.ஆர், ஜெயலலிதா இருவரும் மக்களுக்காக உழைத்து மறைந்தனர். அவர்களுக்கு நாம்தான் வாரிசு. அந்த வழியிலே அதிமுக அரசு செயல்பட்டு வருகின்றது. 41 சதவீதம் அரசாங்க பள்ளியில் பயிலும் மாணவ, மாணவியர்களுக்கு மருத்துவ கனவை, நான் விவசாய குடும்பத்தை சேர்ந்தவன் என்பதால் 7.5 சதவீத உள்ஒதுக்கீட வழங்கி 435 மாணவர்கள் மருத்துவ படிப்பை இந்தாண்டு மேற்கொள்கின்றனர்..மருத்துவ கல்வி கட்டணத்தை அரசாங்கமே ஏற்கும் என சட்டம் இயற்றப்பட்டுள்ளது. விவசாயி தான், விவசாயியின் எண்ணங்களை பார்க்க முடியும்.
அ.தி.மு.க. தேர்தல் அறிக்கையில் பல்வேறு திட்டங்கல் இடம்பெற்றுள்ளன. அதில் 100 நாள் பணியை 150 நாட்களாக உயர்த்தப்படும் கூட்டுறவு கடன் ரத்து, மகளிர் சுய உதவி குழு கடன் ரத்து செய்யப்படும். நகைகடன் தள்ளுபடி செய்யப்படும். அதிமுக தேர்தல் அறிக்கைகளை முழுமையாக நிறைவேற்றும் கட்சியாக உள்ளது. ஆண்டுக்கு 6 கேஸ் சிலிண்டர் அரிசி அட்டைதாரர்களுக்கு வழங்கப்படும். பெண்கள் சுமையை குறைக்கும் விதமாக அரிசி அட்டைதாரர்களுக்கு வாஷிங்மிஷின் வழங்கப்படும், பெண்களுக்கு 1500 ரூபாய் வழங்கப்படும், ரேசன் பொருள் வீடு தேடி வரும்,18 வயது நிரம்பியவர்களுக்கு அரசாங்கமே ஓட்டுநர் பயிற்சி வழங்கப்படும். தை பிறந்தால் வழி பிறக்கும். தை பொங்கல் கொண்டாட கடந்தாண்டு 1000 தந்தோம். இந்தாண்டு பொங்கல் தொகுப்பு 2500 ருபாய் தந்தது அதிமுக. வீடு மற்றும் நிலம் இல்லாத ஏழைகளுக்கு சொந்தமாக கான்கீரிட் வீடு கட்டி தரப்படும். இவ்வாறு முதல்வர் எடப்பாடி பேசினார்.
பிரச்சாரத்தின் போது முன்னாள் எம்.எல்.ஏ தமிழரசன், மாவட்ட அவைத்தலைவர் எஸ்.என்.ராஜேந்திரன், மாவட்ட கழக பொருளாளர் அம்பலம், அனைத்துலக எம்ஜிஆர் மன்ற இணைச் செயலாளர் பெரியசாமி, கழகப் பொதுக்குழு உறுப்பினர் பாலகிருஷ்ணன், மதுரை வக்பு வாரிய தாளாளர் ஜபார், மேலூர் ஒன்றிய கழகச் செயலாளர்கள் பொன்னுச்சாமி, பொன்ராஜேந்திரன், வெற்றிச்செழியன், குலோத்துங்கன், மேலூர் நகர் கழகசெயலாளர் பாஸ்கரன், பேரூர் கழக செயலாளர் மணிகண்டன், மாவட்ட மீனவர் அணி செயலாளர் முருகேசன், அமைப்பு சாரா ஓட்டுநர் அணிச் செயலாளர் அன்புச்செல்வன், தகவல் தொழில்நுட்பப் பிரிவு மண்டல மண்டல துணைத் தலைவர் கௌரிசங்கர், மேலூர்நகர்அம்மா பேரவை சாகுல்ஹமீது, மாவட்ட நிர்வாகிகள் மீரா உசேன், இளையராஜா, உமாபதி, எம்.கே.பி.அருண், மணிவாசகம், மொண்டி, சன்மார்க்கம், தலைமை கழக பேச்சாளர் மலைச்சாமி, சரவணகுமார், உதயசங்கர், உதயகுமார், சிவா, கரும்புச்செல்வம், உட்பட கூட்டணி கட்சிகள் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
ஆன்மிகம்
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
சூப்பர் சாஃப்ட் இட்லி1 day 12 hours ago |
உருளைக்கிழங்கு முட்டை ரெசிபி5 days 11 hours ago |
ரவா பர்பி1 week 1 day ago |
-
பாராளுமன்ற தேர்தல்: புதுச்சேரி மற்றும் தமிழ்நாட்டில் இன்று ஒரேகட்ட வாக்குப்பதிவு: விளவங்கோடு சட்டசபை தொகுதிக்கும் இடைத்தேர்தல்
18 Apr 2024சென்னை, தமிழ்நாட்டில் 39 தொகுதிகளிலும் மற்றும் புதுச்சேரியில் இன்று ஒரேகட்டமாக பாராளுமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது.
-
உலகின் சிறந்த 100 விமான நிலையங்கள் பட்டியல்: 4 இந்திய ஏர்போர்ட்டுகளுக்கு இடம்
18 Apr 2024புது டெல்லி, உலகின் சிறந்த 100 விமான நிலையங்கள் பட்டியலில் 4 இந்திய ஏர்போர்ட்டுகள் இடம்பிடித்துள்ளன.
-
வாக்காளர் அடையாள அட்டை தவிர்த்து வாக்களிக்கத் தகுதியான 12 ஆவணங்கள் எவை எவை?
18 Apr 2024சென்னை, வாக்காளர் அடையாள அட்டை தவிர்த்து வாக்களிக்கத் தகுதியான 12 ஆவணங்கள் எவை எவை? என்பது குறித்து தேர்தல் ஆணையம் விளக்கமளித்துள்ளது.
-
தமிழகத்தில் பா.ஜ.க.வை வலுப்படுத்த முக்கிய பங்கு: அண்ணாமலைக்கு பிரதமர் நரேந்திர மோடி பாராட்டு
18 Apr 2024புதுடெல்லி, தமிழகத்தில் பா.ஜ.க.வை வலுப்படுத்த முக்கிய பங்காற்றியதாக அண்ணாமலைக்கு பிரதமர் மோடி பாராட்டு தெரிவித்துள்ளார்.
-
புதுவை வாக்குச்சாவடியில் தாமரை பூ வடிவில் அலங்காரம்: தேர்தல் அதிகாரிகள் அகற்றினர்
18 Apr 2024புதுச்சேரி, புதுச்சேரி பாகூரில் உள்ள வாக்குச்சாவடி ஒன்றில் தாமரைப் பூ வடிவிலான அலங்காரம் அமைக்கப்பட்டிருந்தது.
-
நடிகை ஷில்பா ஷெட்டியின் ரூ. 98 கோடி சொத்துகள் முடக்கம்: அமலாக்கத்துறை நடவடிக்கை
18 Apr 2024புது டெல்லி, பிரபல பாலிவுட் நடிகை ஷில்பா ஷெட்டி மற்றும் அவரது கணவர் ராஜ் குந்த்ராவுக்கு சொந்தமான புனே பங்களா மற்றும் பங்கு பத்திரங்கள் உட்பட, 97.79 கோடி ரூபாய் மதிப்பில
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 18-04-2024.
18 Apr 2024 -
தமிழ்நாட்டில் இன்றும் 108 டிகிரி பாரன்ஹீட் வெயில் கொளுத்தும்: சென்னை வானிலை மையம் தகவல்
18 Apr 2024சென்னை, தமிழகத்தில் இன்று 108 டிகிரி பாரன்ஹீட் வெயில் கொளுத்தும்' என சென்னை வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது.
-
பார்லி. தேர்தல்: சென்னையில் இருந்து ஒரே நாளில் 1.48 லட்சம் பேர் சிறப்பு பஸ்களில் பயணம்
18 Apr 2024சென்னை, பாராளுமன்ற தேர்தலையொட்டி சென்னையில் இருந்து நேற்று முன்தினம் ஒரே நாளில் 1,48,800 பேர் சொந்த ஊர்களுக்கு பயணம் செய்துள்ளதாக போக்குவரத்து துறை தெரிவித்துள்ளது.&nbs
-
அமேதி தொகுதியில் இந்த முறை போட்டியிட தயங்குகிறார் ராகுல்: கேரள பிரச்சாரத்தில் ராஜ்நாத் சிங் விமர்சனம்
18 Apr 2024திருவனந்தபுரம், கடந்த முறை அமேதி தொகுதியில் தோல்வியடைந்த காரணத்தால் ராகுல் காந்தி இந்த முறை அங்கு போட்டியிடத் தயங்குகிறார் என்று கேரளாவில் நடந்த பிரச்சாரத்தின் போது
-
பாராளுமன்ற தேர்தல்: பேருந்தில் இன்று கட்டணமின்றி பயணிக்கலாம்: எங்கு தெரியுமா?
18 Apr 2024சென்னை, கோவை, ஈரோடு, ஊட்டி, திருப்பூர் மண்டலங்களில் வாக்களிக்க செல்லும் 60 வயதுக்கு மேற்பட்டவர்கள், மாற்றுத்திறனாளிகள் சாதாரண கட்டண நகரப் பேருந்துகளில் இன்று கட்ட
-
இன்று வேட்புமனு தாக்கல் செய்கிறார் அமித்ஷா: காந்திநகர் தொகுதி ரோடுஷோவில் தொண்டர்கள் பிரம்மாண்ட வரவேற்பு
18 Apr 2024ஆமதாபாத், மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா இன்று வேட்புமனுத் தாக்கல் செய்கிறார்.
-
பாராளுமன்ற தேர்தல்: தியேட்டர்களில் இன்று சினிமா காட்சிகள் ரத்து
18 Apr 2024சென்னை, பாராளுமன்ற தேர்தலையொட்டி தமிழகத்தில் உள்ள தியேட்டர்களில் இன்று சினிமா காட்சிகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
-
ஜாமீனுக்காக வேண்டுமென்றே இனிப்பு சாப்பிடுகிறார் கெஜ்ரிவால்: அமலாக்கத் துறை குற்றச்சாட்டு
18 Apr 2024புது டெல்லி, டெல்லி திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ள முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் ஜாமீனுக்காக வேண்டுமென்றே மாம்பழங்கள், இனிப்புகள், சர்க்கரை சேர்த்த தேநீர் ஆகியனவற்றை உ
-
விழிப்போடு செயல்பட வேண்டும்: தி.மு.க. வாக்குச்சாவடி முகவர்களுக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் வேண்டுகோள்
18 Apr 2024சென்னை, வாக்குச்சாவடி முகவர்கள் விழிப்போடு செயல்பட வேண்டும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார்
-
இன்று பாராளுமன்ற தேர்தல்: தமிழகத்தில் 19 ஆயிரம் துணை ராணுவப் படையினர் குவிப்பு
18 Apr 2024சென்னை, பாராளுமன்ற தேர்தலை முன்னிட்டு தமிழகத்தில் முழுவதும் இன்று 19 ஆயிரம் துணை ராணுவப் படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடவுள்ளனர்.
-
பாராளுமன்ற தேர்தல்: தமிழகத்தில் வாக்குப்பதிவு எந்திரங்கள் அனுப்பும் பணிகள் தீவிரம்
18 Apr 2024சென்னை, தமிழ்நாட்டில் பாராளுமன்ற மக்களவைத் தேர்தல் இன்று நடைபெறவுள்ள நிலையில், வாக்குச் சாவடிகளுக்கு வாக்குப்பதிவு இயந்திரங்கள் கொண்டு செல்லும் பணிகள் தீவிரமாக நட
-
மீனாட்சி அம்மன் கோவில் செங்கோல் விவகாரம்: ஆகம விதிகள் குறித்து ஒரே நாளில் நீதிபதிகள் முடிவுக்கு வர இயலாது: உயர் நீதிமன்ற மதுரை கிளை கருத்து
18 Apr 2024மதுரை, மீனாட்சி அம்மன் கோவில் செங்கோல் விவகாரத்தில் நீதிபதிகள் ஆகம விதி நிபுணர்கள் அல்ல என்று கருத்து தெரிவித்துள்ள மதுரை ஐகோர்ட், நீதிபதிகள் ஆகம விதி நிபுணர்கள் அல்ல எ
-
பா.ஜ.க. சித்தாந்தங்களை தோற்கடிக்க போகிறோம்: காங். தொண்டர்களுக்கு ராகுல் வேண்டுகோள்
18 Apr 2024புது டெல்லி, பா.ஜ.க.வையும் அவர்களின் சித்தாந்தத்தையும் தோற்கடிக்கப் போகிறோம் என்று காங்கிரஸ் தொண்டர்களுக்கு வேண்டுகோள் விடுத்து தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள
-
தங்கக் கட்டிகள் மற்றும் பணத்தை கொள்ளையடித்த ஏர் கனடா ஊழியர்கள் உட்பட 6 பேர் கைது
18 Apr 2024கனடா, கனடாவில் ரூ.133 கோடி மதிப்பிலான தங்கக்கட்டிகள் மற்றும் பணத்தை கொள்ளையடித்த ஏர் கனடா ஊழியர்கள் உட்பட 6 பேரை காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.
-
பாராளுமன்ற தேர்தல்: ஓட்டு போடுவதற்காக ஜப்பானில் இருந்து சேலம் வந்த வாக்காளர்
18 Apr 2024சேலம், தமிழகத்தில் பாராளுமன்ற மக்களவை தேர்தல் இன்று நடைபெற உள்ள நிலையில், வாக்களிக்க சேலத்தை சேர்ந்த வாக்காளர் ஒருவர் ஜப்பானிலிருந்து தாயகம் திரும்பியுள்ளார்.
-
தமிழகத்தில் வாக்குப்பதிவுக்கான அனைத்து ஏற்பாடுகளும் தயார்: தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு விளக்கம்
18 Apr 2024சென்னை, தமிழ்நாட்டில் இன்று நடைபெறும் வாக்குப்பதிவுக்கான அனைத்து ஏற்பாடுகளும் தயார் என தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தெரிவித்துள்ளார்.
-
சத்தீஸ்கரில் நான்கு மாதத்தில் 80 நக்சல்கள் சுட்டுக் கொலை
18 Apr 2024ராய்பூர், சத்தீஸ்கரில் இந்தாண்டில் நான்கு மாதங்களில் இதுவரை 80 நக்சல்கள் சுட்டுக் கொல்லப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
-
பாராளுமன்ற தேர்தல்: வாக்களிப்பதற்கு சென்னையிலிருந்து ஒரேநாளில் 1.48 லட்சம் பேர் பயணம்
18 Apr 2024சென்னை, பாராளுமன்ற மக்களவைத் தேர்தலை முன்னிட்டு வாக்களிக்க சென்னையிலிருந்து நேற்று முன்தினம் ஒரே நாளில் 1,48,800 பயணிகள் பயணித்துள்ளனர்.
-
தி.மு.க. வாக்குச்சாவடி முகவர்கள் விழிப்போடு செயல்பட வேண்டும்: முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம்
18 Apr 2024சென்னை, வாக்குச்சாவடிகளில் பணியாற்றும் திமுக கட்சினருக்கு திமுகத் தலைவரும், முதல்வருமான மு.க. ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். அதில் அவர் தெரிவித்ததாவது: