முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நீலகிரியில் இன்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி பிரச்சாரம்

புதன்கிழமை, 31 மார்ச் 2021      அரசியல்
Image Unavailable

நீலகிரியில் இன்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி பிரச்சாரம் மேற்கொள்கிறார். தி.மு.க. தலைவர் மு.க. ஸ்டாலினும் இன்று கோவை மாவட்டத்தில் பிரச்சாரம் செய்ய உள்ளதால் கூடுதல் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது.

தமிழகத்தில் சட்டசபை தேர்தலுக்கு இன்னும் சில தினங்களே உள்ளதால் அரசியல் தலைவர்களின் பிரசாரம் உச்சக்கட்டத்தை எட்டியுள்ளது.  முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று (1-ம் தேதி) காலை நீலகிரி மாவட்டத்தில் பிரச்சாரம் மேற்கொள்கிறார். காலை 10.15 மணிக்கு கூடலூரிலும், 11.40 மணிக்கு குன்னூரிலும் அ.தி.மு.க. மற்றும் பாரதிய ஜனதா வேட்பாளர்களை ஆதரித்து பேசுகிறார்.  பின்னர் அங்கிருந்து கோவை வரும் முதல்வர் எடப்பாடி பழனிசாமி பிற்பகல் 3 மணிக்கு கோவை அவினாசி சாலையில் உள்ள கொடிசியா மைதானத்தில் கோவை மாவட்டத்தில் 10 தொகுதிகளில் போட்டியிடும் அ.தி.மு.க., பாரதிய ஜனதா வேட்பாளர்களை ஆதரித்து பேசுகிறார். அதனை தொடர்ந்து ஈரோடு, நாமக்கல் மாவட்டங்களுக்கு சென்று பிரச்சாரம் செய்கிறார். தி.மு.க. தலைவர் மு.க. ஸ்டாலினும் கோவை மாவட்டத்தில் பிரச்சாரம் மேற்கொள்வதால் அப்பகுதியில் கூடுதல் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து