முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தமிழக சட்டப்பேரவை தேர்தல்: 174 வாக்குப்பதிவு இயந்திரங்கள் மாற்றப்பட்டுள்ளன - சாகு தகவல்

செவ்வாய்க்கிழமை, 6 ஏப்ரல் 2021      தமிழகம்
Image Unavailable

தமிழ்நாடு, கேரளா, புதுச்சேரியில் ஒரே கட்டமாக நேற்று தேர்தல் நடந்தது.  மேற்கு வங்காளம் மற்றும் அசாமில் 3-வது இறுதிகட்ட தேர்தலும் நடந்தது.

தமிழ்நாட்டில் 234 தொகுதிகள் உள்ளன. மொத்த வாக்காளர்கள் எண்ணிக்கை 6 கோடியே 28 லட்சம். இதில் ஆண்கள் 3 கோடியே 9 லட்சம் பேர். பெண்கள் 3 கோடியே 19 லட்சம் பேர். இதுதவிர 3-ம் பாலினத்தவர் 7192 பேர் உள்ளனர். நேற்று காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்றது. வாக்காளர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து, கொரோனா கட்டுப்பாட்டு நெறிமுறைகளை கடைபிடித்த வாக்களித்தனர். 

இதனிடையே தமிழகத்தின் பல்வேறு வாக்குச் சாவடிகளில் வாக்குப்பதிவு இயந்திரத்தில் ஏற்பட்ட கோளாறு காரணமாக அவ்வப்போது வாக்குப்பதிவு தடைபட்டது. 

இந்நிலையில் தமிழகம் முழுவதும் வாக்குப்பதிவு இயந்திரத்தில் ஏற்பட்ட கோளாறு காரணமாக 174 வாக்குப்பதிவு இயந்திரங்கள், 134 கட்டுப்பாடு யூனிட்கள், 559 விவிபாட் இயந்திரங்கள் மாற்றப்பட்டுள்ளன என தலைமை தேர்தல் அதிகாரி அதிகாரி சத்யபிரதா சாகு தெரிவித்துள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து