முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இந்தியாவில் தொடர்ந்து அதிகரிக்கும் கொரோனா; ஒரே நாளில் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்டோருக்கு தொற்று உறுதி

வியாழக்கிழமை, 8 ஏப்ரல் 2021      இந்தியா
Image Unavailable

இந்தியாவில் தினசரி கொரோனா பாதிப்பு எண்ணிக்கை இதுவரை இல்லாத அளவிற்கு நேற்று புதிய உச்சத்தை எட்டியுள்ளது. நாடு முழுவதும் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக ஒரு லட்சத்து 26 ஆயிரத்து 789 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக மத்திய சுகாதார துறை தெரிவித்துள்ளது.  

இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்றுநோயின் தாக்குதலுக்கு ஆளாகிறவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே செல்கிறது. கடந்த 5-ம் தேதி மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையின்படி, இந்தியாவில் முதல் முறையாக தினசரி கொரோனா பாதிப்பு எண்ணிக்கை ஒரு லட்சத்தை தாண்டியது.  இந்நிலையில் நேற்று கொரோனா பாதிப்பு எண்ணிக்கை மீண்டும் புதிய உச்சத்தை எட்டியுள்ளது. மத்திய சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், நாடு முழுவதும் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக ஒரு லட்சத்து 26 ஆயிரத்து 789 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா பாதிப்பால் ஒரே நாளில் 685- பேர் உயிரிழந்துள்ளனர். 

இதுவரை நாடு முழுவதும் கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு ஆளானோர் எண்ணிக்கை ஒரு கோடியே 29 லட்சத்து 28 ஆயிரத்து 574 ஆக அதிகரித்துள்ளது. கொரோனாவில் இருந்து இதுவரை குணமடைந்தவர்கள் எண்ணிக்கை ஒரு கோடியே 18 லட்சத்து 51 ஆயிரத்து 393 ஆக உள்ளது. தொற்று பாதிப்புடன் 9 லட்சத்து 10 ஆயிரத்து 319- பேர் நாடு முழுவதும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.  

கொரோனாவுக்கு இதுவரை பலியானவர்கள் எண்ணிக்கை ஒரு லட்சத்து 66 ஆயிரத்து 862- ஆக உள்ளது. நாட்டில் இதுவரை கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்கள் எண்ணிக்கை 9 கோடியே ஒரு லட்சத்து 98 ஆயிரத்து 673 ஆக உயர்ந்துள்ளது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து