முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இன்று மாலை 6 மணி முதல் 12-ம் தேதி காலை 6 மணி வரை முழு ஊரடங்கு அமல்: மத்திய பிரதேச அரசு அறிவிப்பு

வியாழக்கிழமை, 8 ஏப்ரல் 2021      இந்தியா
Image Unavailable

மத்திய பிரதேசத்தில் இன்று மாலை 6 மணி முதல் வரும் 12-ம் தேதி காலை 6 மணி வரை முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் கடந்த ஆண்டு வந்த கொரோனாவின் முதல் அலையைக் காட்டிலும், தற்போது வந்துள்ள இரண்டாவது அலையின் தாக்கம் மிக அதிக அளவில் இருக்கிறது. இதனால் பல மாநிலங்களில் தினசரி கொரோனா பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.  

இந்நிலையில் மத்திய பிரதேசத்தில் இன்று மாலை 6 மணி முதல் திங்கள்கிழமை காலை 6 மணி வரை இரண்டு நாட்கள் நகரங்களில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் மருத்துவ நிபுணர்களுடன் ஆலோசனைகள் மேற்கொள்ளப்பட்டு, கொரோனா தொற்று எண்ணிக்கை அதிகரித்து வரும் பகுதிகளில், தகுந்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்று மத்திய பிரதேச முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் தெரிவித்துள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து