முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தடுப்பூசியின் 2-வது டோஸ் செலுத்தி கொண்டார் மத்திய அமைச்சர் தோமர்

வியாழக்கிழமை, 8 ஏப்ரல் 2021      இந்தியா
Image Unavailable

மத்திய வேளாண் அமைச்சர் நரேந்திர சிங் தோமர் நேற்று கொரோனா தடுப்பூசியின் இரண்டாவது டோஸை செலுத்திக் கொண்டார்.

இந்தியாவில் கொரோனா பாதிப்புகளை கட்டுப்படுத்த கடந்த ஜனவரி 16-ம் தேதி முதல் கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணிகள் தொடங்கின. முதற்கட்டமாக சுகாதார பணியாளர்கள் மற்றும் முன்கள பணியாளர்களுக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டது.  அதனை தொடர்ந்து மார்ச் 1-ம் தேதி முதல் 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கும், இணை நோய்கள் கொண்ட 45 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கும் கொரோனா தடுப்பூசி போட மத்திய அரசு அனுமதி வழங்கியது. அதற்கடுத்ததாக ஏப்ரல் 1-ம் தேதி முதல் 45 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசி செலுத்த அனுமதி வழங்கப்பட்டது.  இதனையடுத்து அரசியல் தலைவர்கள், திரைத்துறை பிரபலங்கள் உள்ளிட்ட பலரும் கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்வதோடு, மக்கள் அனைவரும் தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும் என்றும் வலியுறுத்தி வருகின்றனர். 

இந்த நிலையில் மத்திய வேளாண் அமைச்சர் நரேந்திர சிங் தோமர், சில வாரங்களுக்கு முன் டெல்லி ராம் மனோகர் மருத்துவமனையில் கொரோனா தடுப்பூசியின் முதல் டோஸை போட்டுக் கொண்டார். இதனையடுத்து நேற்று அவருக்கு தடுப்பூசியின் 2-வது டோஸ் போடப்பட்டது.  தடுப்பூசியை செலுத்திக் கொண்டது குறித்து தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், 

நாம் நோயை குறித்து அச்சம் கொண்டிருக்க வேண்டும், ஆனால் தடுப்பூசி குறித்து அச்சம் கொள்ளத் தேவையில்லை. நீங்கள் தடுப்பூசி செலுத்திக் கொள்ள தகுதியான வயதுடையவர்களாக இருந்தால், இன்றே பதிவு செய்து கொரோனா தடுப்பூசியை செலுத்திக் கொள்ளுங்கள்  என்று பதிவிட்டுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து