முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

9, 11-ம் வகுப்பில் அனைத்து மாணவர்களும் தேர்ச்சி: மகராஷ்டிர அமைச்சர் வர்ஷா அறிவிப்பு

வியாழக்கிழமை, 8 ஏப்ரல் 2021      இந்தியா
Image Unavailable

மகாராஷ்டிராவில் கொரோனா பரவல் காரணமாக 9, 11-ம் வகுப்பு மாணவர்கள் பரீட்சையின்றி தேர்ச்சி பெற்றதாக அமைச்சர் வர்ஷா கெய்க்வாட் அறிவித்து உள்ளார்.

நாட்டில் கொரோனா கால் பதித்து ஒரு ஆண்டை கடந்து விட்டது. கொரோனாவின் ஆதிக்கம் மாணவர்களின் படிப்பை அதிகமாக பாதித்துள்ளது.  கடந்த ஆண்டு கொரோனா தொற்றினால் அமல்படுத்தப்பட்டு இருந்த பொது ஊரடங்கு காரணமாக மாணவர்களின் நலன் கருதி பள்ளிகள், கல்லூரிகள் மூடப்பட்டன. அதுமட்டுமின்றி கடந்த ஆண்டு சில வகுப்புகளுக்கு தேர்வு நடத்தாமலேயே அனைத்து மாணவர்களும் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. அதன் பின்னர் நோய் பாதிப்பு சற்று குறைந்ததை தொடர்ந்து நவம்பர் மாதம் 23-ம் தேதி 9-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை பள்ளிக்கூடம் திறக்க அனுமதி வழங்கப்பட்டது.  மேலும் வருகிற 23-ம் தேதி முதல் 10 மற்றும் 12-ம் வகுப்பிற்கான பொதுத்தேர்வு நடத்த திட்டமிடப்பட்டது.  ஆனால் மீண்டும் கொரோனாவின் 2-வது அலை மாணவர்களின் படிப்பை சூறையாடி உள்ளது. தொற்று அதிதீவிரமாக பரவியதை அடுத்து பள்ளி, கல்லூரிகள் மீண்டும் மூடப்பட்டன. மாணவர்களுக்கு ஆன்லைன் மூலம் பாடம் நடத்தப்படுகிறது. 

இதற்கிடையே மகராஷ்டிர மாநில கல்வி அமைச்சர் வர்ஷா கெய்க்வாட் இந்த ஆண்டும் 9 மற்றும் 11-ம் வகுப்புக்கான பரீட்சைகள் நடத்தப்படாமல் மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி பெற்றதாக அறிவித்துள்ளார்.  இதுகுறித்து அவர் கூறியதாவது:-

மகராஷ்டிராவில் தற்போது நோய் தொற்று வேகமாக பரவி வருவதால் 9 மற்றும் 11-ம் வகுப்பு தேர்வுகளை நடத்துவதற்கு கடினமான சூழ்நிலை நிலவுகிறது.  எனவே 9 மற்றும் 11-ம் வகுப்பு மாணவர்களுக்கு தேர்வு நடத்தாமல் தேர்ச்சி பெற்றதாக அறிவித்து உள்ளோம். நீண்ட ஆலோசனைக்கு பிறகே மாணவர்களின் நலன் கருதி இந்த முடிவு எடுக்கப்பட்டு உள்ளது.  ஏற்கனவே 10 மற்றும் 12-ம் வகுப்பிற்கான பொதுத்தேர்வு நடத்துவதாக அறிவிக்கப்பட்டு உள்ளது. இருப்பினும் தற்போதைய மோசமான சூழ்நிலையில் அந்த தேர்வுகளை நடத்துவது குறித்து ஆய்வு செய்து விரைவில் முடிவை அறிவிப்போம்.  இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து