முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தமிழகத்தில் மேலும் 4,276 பேருக்கு கொரோனா

வியாழக்கிழமை, 8 ஏப்ரல் 2021      தமிழகம்
Image Unavailable

தமிழகத்தில் மேலும் 4,276 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் பாதித்தவர்கள் எண்ணிக்கை 9 லட்சத்து 15 ஆயிரத்து 386 (9,15,386) ஆக உயர்ந்துள்ளதாக மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. 

தமிழகத்தில் தினமும் சுகாதாரத்துறை சார்பில் அறிக்கை வெளியிடப்பட்டு வருகிறது. அதன்படி, சுகாதாரத்துறை நேற்று வெளியிட்ட அறிக்கையில்,  தமிழகத்தில் மேலும் 4,260 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் மொத்த பாதிப்பு 9,15,386 ஆக அதிகரித்துள்ளது.   தமிழகத்தில் கொரோனாவில் இருந்து மேலும் 1,869 பேர் குணமடைந்துள்ளனர். இதன் மூலம் மொத்தம் 8,72,415 குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.   தமிழகத்தில் கொரோனாவால் நேற்று மேலும் 19 பேர் உயிரிழந்துள்ளனர். இதன் மூலம் மொத்த பலி எண்ணிக்கை 12,840 ஆக உயர்ந்துள்ளது. இதில் அரசு மருத்துவமனையில் 11 பேரும், தனியார் மருத்துவமனையில் 8 பேரும் உயிரிழந்துள்ளனர்.  சென்னையில் நேற்று ஒரே நாளில் 1520 பேர் கொரோனானால் பாதிக்கப்பட்டுள்ளனர். சென்னையில் மொத்தம் 2,59,320 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.   தமிழகத்தில் இதுவரை 2,02,58,907 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. நேற்று மட்டும் 85,281 மாதிரிகள் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.  தமிழகத்தில் தற்போது 30,131 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.  தமிழகத்தில் இதுவரை கொரோனா பாதிக்கப்பட்டவர்களில் மொத்தம் 5,52,545 பேர் ஆண்கள், நேற்று மட்டும் 2,593 ஆண்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.  தமிழகத்தில் இதுவரை கொரோனா பாதிக்கப்பட்டவர்களில் மொத்தம் 3,62,805 பேர் பெண்கள், நேற்று மட்டும் 1,683 பெண்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழகத்தில் இதுவரை மொத்தம் 36 திருநங்கைக்கு கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். நேற்றைக்கு திருநங்கை யாருக்கும் கொரோனா உறுதி செய்யப்படவில்லை.   இந்தியாவிலேயே அதிகபட்சமாக தமிழகத்தில் மொத்தம் 260 மையங்களில் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. இதில் அரசு மையங்கள் 69-ம்,  தனியார் மையங்கள் 191 பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளது.  வெளிமாநிலங்களில் இருந்து நேற்று தமிழகம் வந்த 16 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. அதன்படி கர்நாடகாவில் வந்த ஒருவரும், மேற்குவங்கத்தில் இருந்து வந்த 9 பேருக்கும், பீகாரில் இருந்து வந்த 2 பேருக்கும், ஜார்கண்ட், மகராஷ்டிரா, ஆந்திர பிரதேசம், மத்திய பிரதேசத்தில் இருந்து வந்த  தலா ஒருவருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதார துறை தெரிவித்துள்ளது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து