முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

காஷ்மீர் என்கவுண்டரில் சுட்டுக்கொல்லப்பட்ட பயங்கரவாதிகளின் எண்ணிக்கை 5 ஆக உயர்வு

வெள்ளிக்கிழமை, 9 ஏப்ரல் 2021      இந்தியா
Image Unavailable

Source: provided

ஜம்மு : ஜம்மு-காஷ்மீரின் சோபியான் மாவட்டத்தில் பயங்கரவாதிகளுக்கும், பாதுகாப்புப் படையினருக்கும் இடையே ஏற்பட்ட துப்பாக்கிச் சூட்டில் 5 பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டதாக காவல்துறையினர் தெரிவித்தனர். 

சோபியான் மாவட்டத்தில் பயங்கரவாதிகள் பதுங்கி இருப்பதாக வந்த தகவலையடுத்து, காவல்துறையினர் மற்றும் ராணுவத்தினரும் கூட்டாக இணைந்து அப்பகுதியைச் சுற்றி வளைத்து, துப்பாக்கிச் சூடு நடத்தினர்.

இந்த துப்பாக்கிச்சூட்டில் வியாழக்கிழமை மாலை மூன்று பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர். பிறகு வெள்ளிக்கிழமை காலை மீண்டும் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதில் மேலும் 2 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர். மேலும், பாதுகாப்புப் படையினர் அப்பகுதியில் தொடர்ந்து தேடுதல் வேட்டை நடத்தி வருகின்றனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து