முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நாடு முழுவதும் 1.30 லட்சத்தை கடந்தது கொரோனா பாதிப்பு

வெள்ளிக்கிழமை, 9 ஏப்ரல் 2021      இந்தியா
Image Unavailable

Source: provided

புதுடெல்லி : நாடு முழுவதும் புதிதாக 1,31,968 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. அது போலவே கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா தொற்றால் 780 பேர் பேர் பலியாகியுள்ளனர்.

கடந்த 24 மணி நேரத்தில் நாடு முழுவதும் ஏற்பட்ட கொரோனா பாதிப்பு தொடர்பாக மத்திய சுகாதார அமைச்சகம் அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில் கூறப்பட்டுள்ளதாவது:-

நாடு முழுவதும் கொரோனா தொற்று தொடர்ந்து அதிகரித்து வருகிறது. நேற்று ஒரே நாளில் 1,31,968 பேருக்குக் கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இதன் மூலம் மொத்த பாதிப்பு 1,30,60,542 கோடியாக அதிகரித்துள்ளது.  குணமடைந்தோர் எண்ணிக்கை கடந்த 24 மணி நேரத்தில் 61,899 ஆக உள்ளது.

இதுவரை குணமடைந்தோர் எண்ணிக்கை 1,19,13,292ஆக உள்ளது.  ஒரே நாளில் 780 பேர் கொரோனாவால் உயிரிழந்தனர். மொத்த உயிரிழப்பு 1,67,642 ஆக உள்ளது.

நாடுமுழுவதும் சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 9,79,608 ஆக உயர்ந்துள்ளது.  கடந்த ஜனவரி 16-ம் தேதி நாட்டில் கொரோனா தடுப்பூசி பணி தொடங்கியது. இதுவரை 9,43,34,262 பேர் கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டுள்ளனர். இவ்வாறு மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து