முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

வளிமண்டல மேலடுக்கு சுழற்சி: தென் தமிழகத்தில் 5 நாட்கள் இடியுடன் மழைக்கு வாய்ப்பு

வெள்ளிக்கிழமை, 9 ஏப்ரல் 2021      தமிழகம்
Image Unavailable

Source: provided

சென்னை : வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தென் தமிழகத்தில் 5 நாட்கள் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. 

இது குறித்து வானிலை மைய இயக்குனர் புவியரசன் கூறியுள்ளதாவது, 

தென் தமிழகம் மற்றும் அதனை ஒட்டிய பகுதியில் வளி மண்டல சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக இன்று மேற்கு தொடர்ச்சி மலையொட்டிய மாவட்டங்கள் மற்றும் தென் தமிழக கடலோர மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடியுடன் லேசான மழை பெய்யக்கூடும். 

மற்ற மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்காலில் வறண்ட வானிலை நிலவும். 11-ம் தேதி தென் தமிழகத்தில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும். ஏனைய மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்காலில் வறண்ட வானிலை நிலவும். 

12-ம் தேதி தென் தமிழகம் மற்றும் வட தமிழக உள் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடியுடன் லேசான மழை பெய்யும். மற்ற மாவட்டங்களில் வறண்ட வானிலை நிலவும்.

13-ம்  தேதி மேற்கு தொடர்ச்சி மலையொட்டிய மாவட்டங்கள் மற்றும் தென் தமிழக கடலோர மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடியுடன் லேசான மழை பெய்யக்கூடும். மற்ற மாவட்டங்கள் புதுவை, காரைக்காலில் வறண்ட வானிலை நிலவும். சென்னையை பொறுத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். 

தமிழகத்தில் மதுரை மற்றும் விருதுநகர் மாவட்டங்களில் இன்று  அதிகபட்சம் வெப்பநிலையானது இயல்பை விட 1-முதல் 2 டிகிரி செல்சியஸ் வரை உயரக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் தெரிவித்துள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து