முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஜூலையில் புதிய கட்சி தொடங்குகிறார் ஜெகன்மோகன் ரெட்டியின் சகோதரி

சனிக்கிழமை, 10 ஏப்ரல் 2021      இந்தியா
Image Unavailable

Source: provided

ஐதராபாத் : ஆந்திர மாநில முன்னாள் முதல்வர் ஒய்.எஸ். ராஜேசேகர ரெட்டியின் மகளும், ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டியின் சகோதரியுமான ஒய்.எஸ். ஷர்மிளா ரெட்டி தெலுங்கானாவில் ஜூலை 8-ம் தேதி புதிய கட்சியைத் தொடங்கவிருக்கிறார். 

தெலுங்கானாவில் 2023-ம் ஆண்டில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ள நிலையில், ஜூலை 8-ம் தேதி தெலுங்கானா மாநிலத்தில் புதிய அரசியல் கட்சியை ஷர்மிளாதொடங்க இருப்பதாக அறிவித்துள்ளார்.

அன்றைய தினம், கட்சியின் பெயர், சின்னம், கொள்கை ஆகியவை வெளியிடப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. ஷர்மிளாவின் இந்த முடிவை, அவரது அம்மா வரவேற்றுள்ளார்.

மேலும், தெலுங்கானாவில் காலியாகவிருக்கும் 1.91 லட்சம் பணியிடங்களை நிரப்ப வலியுறுத்தி, ஷர்மிளா வரும் 15-ம் தேதி முதல் மூன்று நாள்களுக்கு உண்ணாவிரதப் போராட்டத்திலும் ஈடுபட உள்ளதாக அறிவித்துள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து