முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மே. வங்கத்தில் துப்பாக்கிச்சூடு நடந்த இடத்தை இன்று பார்வையிடுகிறார் மம்தா: பேரணி நடத்தவும் திட்டம்

சனிக்கிழமை, 10 ஏப்ரல் 2021      இந்தியா
Image Unavailable

Source: provided

கொல்கத்தா : மேற்குவங்கத்தில் துப்பாக்கிச்சூடு நடந்த இடத்தை மம்தா இன்று  பார்வையிடுகிறார். மேலும் பேரணி நடத்தவும் அவர் திட்டமிட்டுள்ளார். 

294 தொகுதிகளை கொண்ட மேற்குவங்காள சட்டசபைக்கு 8 கட்டங்களாக தேர்தல் நடைபெறுகிறது. ஏற்கனவே 3 கட்ட தேர்தல் நிறைவடைந்துள்ளது. 4-ம் கட்ட தேர்தலாக 44 தொகுதிகளுக்கு நேற்று நடைபெற்றது. இந்த  4-ம் கட்ட தேர்தலில் மேற்குவங்காளத்தின் பல்வேறு பகுதிகளில் வன்முறை சம்பவங்கள் அரங்கேறின.

வேட்பாளர்கள், ஊடகங்கள் மீது தாக்குதல் நடைபெற்றது.  அம்மாநிலத்தின் கூச் பெஹார் மாவட்டம் சீத்தல்குச்சி தொகுதிக்கு உள்பட்ட ஜார்பட்கி என்ற பகுதியில் உள்ள வாக்குச்சாவடிக்கு அருகே ஏற்பட்ட மோதலை தொடர்ந்து துப்பாக்கி சூடு சம்பவமும் நடந்தது. இதில் 4 பேர் உயிரிழந்தனர். 

இந்நிலையில், கூச் பெஹார் மாவட்டம் சீத்தல்குச்சி தொகுதியில் உள்ள ஜார்பட்கி பகுதியில் துப்பாக்கிச்சூடு நடைபெற்ற இடத்தை மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி இன்று நேரில் பார்வையிடுகிறார். அதன்பின்னர் அங்கிருந்து அவர் பேரணியாக சென்று போராட்டத்தில் ஈடுபடவும் திட்டமிட்டுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து