முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

துணை முதல்வர் ஓ.பி.எஸ். மாமியார் மரணம்: முதல்வர் எடப்பாடி பழனிசாமி நேரில் ஆறுதல்

சனிக்கிழமை, 10 ஏப்ரல் 2021      தமிழகம்
Image Unavailable

Source: provided

உத்தமபாளையம் : துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தின் மாமியார் காலமானதைத் தொடர்ந்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி நேரில் சென்று ஆறுதல் கூறினார்.

தமிழக துணை முதல்வரும், அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளருமான ஓ.பன்னீர்செல்வத்தின் மாமியார் வள்ளியம்மாள் (வயது 92). இவரது கணவர் அழகுபாண்டி ஏற்கனவே இறந்து விட்டார். உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டு இருந்த வள்ளியம்மாள் கடந்த 7-ம்  தேதி உயிரிழந்தார். அவருக்கு உள்ளூர் மக்கள் மற்றும் அரசியல் கட்சியினர் நேரில் வந்து அஞ்சலி செலுத்தினர். இதனைத் தொடர்ந்து அவரது உடல் சொந்த ஊரில் அடக்கம் செய்யப்பட்டது.

இந்நிலையில் உத்தமபாளையத்துக்கு தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி நேரில் வந்து வள்ளியம்மாள் உருவபடத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். மேலும் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், அவரது மனைவி விஜயலெட்சுமி மற்றும் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார்.

நிகழ்ச்சியில் அமைச்சர்கள் மற்றும் அ.தி.மு.க. நிர்வாகிகள் கலந்து கொண்டனர். முதல்வர் எடப்பாடி பழனிசாமி உத்தமபாளையம் வந்த செய்தி அறிந்ததும் அங்கு ஏராளமான பொதுமக்கள் மற்றும் அ.தி.மு.க. தொண்டர்கள் குவிந்தனர்.  கொரோனா பரவல் காரணமாக கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதால் அவர்கள் முதல்வரை சந்திக்க அனுமதி வழங்கப்படவில்லை. இருந்தபோதும் முதல்வர் பொதுமக்களை பார்த்து கையசைத்தவாறு நன்றி தெரிவித்து சென்றார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து