முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மேற்கு வங்க அரசியல் சூழ்நிலையை மாற்றுவதற்கான நேரம் வந்து விட்டது : பிரதமர் மோடி பேச்சு

சனிக்கிழமை, 10 ஏப்ரல் 2021      இந்தியா
Image Unavailable

Source: provided

சிலிகுரி : மேற்கு வங்கத்தில் பல ஆண்டுகளாக உருவாக்கப்பட்ட அரசியல் சூழ்நிலையை மாற்றும் நேரம் வந்து விட்டது என பிரதமர் மோடி தெரிவித்து உள்ளார்.

சிலிகுரியில் நடந்த பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பேசியதாவது : கூச்பெஹாரில் நிகழ்ந்த சம்பவம் கவலை அளிக்கிறது. இறந்தவர்களின் குடும்பத்திற்கு இரங்கல் தெரிவிக்கிறேன்.

பா.ஜ.க.விற்கு கிடைக்கும் ஆதரவை பார்த்து மம்தாவும், அவரது கட்சி குண்டர்களும் கவலை அடைந்து உள்ளனர். தோல்வி பயத்தால், மம்தா, திரிணமுல் குண்டர்கள் இந்தளவு தரம் தாழ்ந்த செயல்களில் ஈடுபட்டு உள்ளனர்.

இதுபோன்ற பணிகளை, செய்ய அனுமதிக்க முடியாது என மம்தாவிற்கு தெரிவித்து கொள்கிறேன். கூச்பெஹார், சம்பவத்திற்கு காரணமானவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என தேர்தல் ஆணையத்தை கேட்டு கொள்கிறேன்.

இது மாதிரியான வன்முறைகள், பாதுகாப்பு படையினருக்கு எதிராக மக்களை தூண்டி விடும் சூழ்ச்சிகள், தேர்தல் நடவடிக்கையை நிறுத்தும் சூழ்ச்சி போன்றவை உங்களை பாதுகாக்காது என்பதை மம்தா தெரிந்து கொள்ள வேண்டும்.

10 ஆண்டு காலம் மோசமான நிர்வாகம் நடத்திய உங்களை இது போன்ற வன்முறைகள் காப்பாற்றாது. பல ஆண்டுகளாக மேற்கு வங்கத்தில் உருவாக்கப்பட்ட அரசியல் சூழ்நிலையை மாற்றும் நேரம் வந்து விட்டது. இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து