முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

10 கோடி தடுப்பூசிகள் போட்டு இந்தியா சாதனை

ஞாயிற்றுக்கிழமை, 11 ஏப்ரல் 2021      இந்தியா
Image Unavailable

Source: provided

டெல்லி : உலக நாடுகளில் 10 கோடி டோஸ் தடுப்பூசி மைல்கல்லை எட்டி இந்தியா சாதனை படைத்திருக்கிறது.

ஜனவரி மாதம் 16ஆம் தேதியில் இருந்து இந்தியாவில் கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணி நடைபெற்று வருகிறது. முதற்கட்டமாக முன்களப் பணியாளர்களுக்கு கோரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டு வந்தது. இரண்டாம் கட்டமாக 60 வயதுக்கு மேற்பட்டோருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது. மூன்றாம் கட்டமாக 45 வயதுக்கு மேற்பட்டோருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது.

நேற்றுடன் 85 ஆவது நாளாக தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. 85ஆவது நாளான நேற்று 100 மில்லியன் டோஸ் (10 கோடி) தடுப்பூசியை கடந்திருக்கிறது இந்தியா. உலக நாடுகளில் 100 மில்லியன் டோஸ் தடுப்பூசி என்ற மைல்கல்லை எட்டிய முதல் நாடு இந்தியா என்று மத்திய சுகாதாரத்துறை அறிவித்திருக்கிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து