முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தடுப்பூசி திருவிழா: 4 முக்கிய விஷயங்களை கடைப்பிடிக்க பிரதமர் மோடி வலியுறுத்தல்

ஞாயிற்றுக்கிழமை, 11 ஏப்ரல் 2021      இந்தியா
Image Unavailable

Source: provided

புது டெல்லி : தேசிய அளவிலான தடுப்பூசி திருவிழாவில் 4 முக்கிய விஷயங்களை கடைப்பிடிக்கும்படி நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

கொரோனா பாதிப்புகளை கட்டுப்படுத்த இந்தியாவில் தடுப்பூசிகளை பயன்படுத்தி கொள்ள அவசரகால அனுமதியை மத்திய அரசு வழங்கியது.  இதன்படி, கடந்த ஜனவரி 16-ம் தேதி முதல் நாட்டில் தடுப்பூசிகள் போடப்பட்டு வருகின்றன. உள்நாட்டில் உற்பத்தியான கோவேக்சின் மற்றும் கோவிஷீல்டு ஆகியவை இதற்கு அனுமதி அளிக்கப்பட்டு பயன்படுத்தப்பட்டு வருகின்றன.

இதனை தொடர்ந்து கடந்த மார்ச் 1-ம் தேதி முதல் 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கும், இணை நோய்கள் கொண்ட 45 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கும் கொரோனா தடுப்பூசி போட மத்திய அரசு அனுமதி வழங்கியது. அதற்கடுத்ததாக ஏப்ரல் 1-ம் தேதி முதல் 45 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசி செலுத்த அனுமதி வழங்கப்பட்டது.

இதற்கிடையில், டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் சில வாரங்களுக்கு முன் முதல் டோஸ் கொரோனா தடுப்பூசியை செலுத்தி கொண்ட பிரதமர் மோடி, கடந்த 8-ம் தேதி தடுப்பூசியின் 2-வது டோசை செலுத்தி கொண்டார். 

இந்த நிலையில், தேசிய அளவில் கொரோனா தடுப்பூசி போடும் பணிகள் நேற்று தொடங்கியது.  இதுபற்றி பிரதமர் மோடி மக்களுக்கு ஆற்றியுள்ள உரையில், 

நாம்  தேசிய அளவில் டிகா உத்சவ்வை (தடுப்பூசி திருவிழா) தொடங்கியுள்ளோம். அதனால், நாட்டு மக்கள் 4 முக்கிய விஷயங்களை கடைப்பிடிக்க வேண்டும் என வலியுறுத்தி கேட்டு கொள்கிறேன்.  தடுப்பூசி போட செல்லும் மக்களுக்கு தேவையான உதவியை செய்யுங்கள்.  கொரோனா சிகிச்சை பெறுவதற்கு உதவி செய்யுங்கள்.   

முக கவசம் அணிந்து செல்லுங்கள்.  மற்றவர்களையும் அணியும்படி ஊக்கப்படுத்துங்கள்.  யாருக்கேனும் கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டால், அந்த பகுதியில் சிறிய அளவிலான கட்டுப்பாட்டு மண்டல பகுதியை உருவாக்குங்கள். இவ்வாறு பிரதமர் மோடி கூறியுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து