முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கொரோனா விதி மீறல்: சென்னை காசிமேடு மார்க்கெட்டில் மீன் வாங்க குவிந்த மக்கள்

ஞாயிற்றுக்கிழமை, 11 ஏப்ரல் 2021      தமிழகம்
Image Unavailable

Source: provided

சென்னை : கொரோனா விதிகளை மீறி சென்னை காசிமேடு மீன் மார்க்கெட்டில் மீன் வாங்க மக்கள் கூட்டம் அலைமோதியது. 

 தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது. தினசரி பாதிப்பு எண்ணிக்கை 6 ஆயிரத்தை நெருங்கி உள்ளது. கொரோனா பரவலை தடுக்க தமிழக சுகாதாரத்துறை சார்பில் பல்வேறு தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த புதிய கட்டுப்பாடுகள் நடைமுறைக்கு வந்துள்ளன. 

புதிய கட்டுப்பாடுகள் நடைமுறைக்கு வந்த போதும், வர்த்தக பகுதிகளில் பெரிய அளவில் மாற்றம் ஏற்படவில்லை. குறிப்பாக மார்க்கெட் பகுதிகளில் பொதுமக்கள் சமூக இடைவெளியை கடைப்பிடிப்பதில் அலட்சியமாகவே உள்ளனர்.

நேற்று ஞாயிற்றுக்கிழமை விடுமுறை தினம் என்பதால், சென்னை காசிமேடு துறைமுகம் மற்றும் மீன் மார்க்கெட்டில் மீன் பிரியர்கள் மீன் வாங்குவதற்காக காலையிலேயே குவிந்தனர்.

கொரோனா குறித்த அச்சமின்றி, மக்கள் சமுக இடைவெளியை மறந்து கூட்டம் கூட்டமாக வந்ததை காண முடிந்தது. இதனால் கொரோனா மேலும் பரவும் அச்சம் ஏற்பட்டுள்ளது. இதில் ஒரு சிலர் முககவசம் அணியாமலும் வந்து மீன்களை வாங்கி சென்றனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து