முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கூஜ்பெகரில் நடந்தது இனப்படுகொலை : மேற்குவங்க முதல்வர் மம்தா ஆவேசம்

ஞாயிற்றுக்கிழமை, 11 ஏப்ரல் 2021      இந்தியா
Image Unavailable

Source: provided

கொல்கத்தா : மேற்கு வங்க மாநிலம் கூஜ்பெகரில் நடந்த துப்பாக்கி சூட்டில் 4 பேர் கொல்லப்பட்டது இனப்படுகொலை என்று மம்தா ஆவேசமாக கூறினார். 

மேற்கு வங்காள மாநிலத்தில் நான்காம் கட்ட தேர்தலின்போது, கூஜ்பெகர் மாவட்டம், சிடால்குச்சி தொகுதியில் உள்ள 126-வது வாக்குச்சாவடியில் மிகப்பெரிய கலவரம் ஏற்பட்டது. மத்திய பாதுகாப்பு படையினர் நடத்திய துப்பாக்கி சூட்டில் 4 பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

இது பா.ஜ.க.வின் சதி என மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி குற்றம்சாட்டி வருகிறார். துப்பாக்கி சூடு சம்பவத்தைத் தொடர்ந்து கூஜ்பெகர் மாவட்டத்திற்குள் அரசியல் கட்சி தலைவர்களி நுழைய தடை விதிக்கப்பட்டுள்ளது. 

இந்நிலையில் முதல்வர் மம்தா பானர்ஜி நேற்று சிலிகுரியில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, கூஜ்பெகரில் நடந்த துப்பாக்கி சூட்டில் 4 பேர் கொல்லப்பட்டது இனப்படுகொலை என்றும், மார்பு மற்றும் கழுத்தை குறிவைத்து சுடப்பட்டிருப்பதாகவும் குற்றம்சாட்டினார்.

சி.ஐ.எஸ்.எப். வீரர்கள், தொழிலக விவகாரங்களை கையாள மட்டுமே பயிற்சி பெற்றிருப்பதாகவும், மக்கள் கூட்டத்தை கட்டுப்படுத்த அவர்கள் பயிற்சி பெறவில்லை என்றும் கூறினார். 

மேலும், துப்பாக்கி சூட்டினால் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருடன், மம்தா பானர்ஜி வீடியோ கால் மூலம் பேசினார். அவர்களுக்கு ஆறுதல் கூறிய மம்தா, 14-ம் தேதி நேரில் வந்து சந்திப்பதாக கூறினார்.  அதன் பின்னர் ஜல்பைகுரியில் நடைபெற்ற பிரச்சார கூட்டத்தில் மம்தா பேசியதாவது:-

நான் வங்கப் புலி. என்னை கூஜ் பெகருக்கு செல்ல விடாமல் தடுத்து விட்டனர். அதனால் சிலிகுரியில் இருந்தபடி, வீடியோ கால் வாயிலாக அவர்களிடம் (துப்பாக்கிச் சூட்டில் இறந்தவர்களின் குடும்பங்கள்) பேசினேன். அவர்கள் (பி.ஜே.பி ஆளும் மத்திய அரசு) 4 கட்டங்களாக நடந்த தேர்தலிலும் தோல்வி அடைந்து விட்டதை அறிவார்கள்.

எனவே இப்போது அவர்கள் துப்பாக்கிகளைப் பயன்படுத்துகிறார்கள். இந்த தோட்டாக்களுக்கு வாக்குகள் மூலமாக நாங்கள் பழிதீர்ப்போம் என்று பேசினார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து