முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தடுப்பூசி போட்டு கொண்டால் சொத்து வரியில் சலுகை: டெல்லி மாநகராட்சி அறிவிப்பு

ஞாயிற்றுக்கிழமை, 11 ஏப்ரல் 2021      இந்தியா
Image Unavailable

Source: provided

புதுடெல்லி :  தடுப்பூசி போட்டுக் கொண்டால் சொத்து வரியில் சலுகை வழங்கப்படும் என்று டெல்லி மாநகராட்சி அறிவித்துள்ளது. 

கொரோனா இரண்டாவது அலை வேகமாக பரவி வருகிறது. கடந்த சில நாட்களாக, தலைநகர் டெல்லியில் தொற்று பாதித்தவர்களின் எண்ணிக்கை பலமடங்கு அதிகரித்து வருகிறது.

தொற்றுநோய் பரவலை தடுக்க முதல்வர் கெஜ்ரிவால் அரசு தடுப்பூசி போடும் பணியை தீவிரப்படுத்தியது. ஆனால், தடுப்பூசி போட்டுக் கொள்ள மக்கள் முன்வரவில்லை. அதனால், தடுப்பூசி போட்டுக் கொள்வதை ஊக்குவிக்கும் வகையில், வடக்கு டெல்லி மேயர் ஜெய் பிரகாஷ், பம்பர் சலுகையை அறிவித்துள்ளார்.

அதாவது, கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டால், அவர்களின் சொத்து வரியில் சலுகை வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக வெளியிட்ட அறிவிப்பில், 

வீட்டின் உரிமையாளர் மற்றும் தகுதியுள்ள குடும்ப உறுப்பினர்கள் தடுப்பூசி போட்டுக் கொண்டதற்கான சான்றை வழங்க வேண்டும். பின்னர் சொத்து வரி சலுகையை பெற விண்ணப்பிக்கலாம்.

இதற்காக மாநகராட்சிக்கு சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது. தடுப்பூசி போட்டுக் கொண்ட வீடுகளின் உரிமையாளர்கள் மற்றும் வரி செலுத்துபவர்களுக்கு சொத்து வரியில் 5 சதவீத தள்ளுபடி வழங்கப்படும். வரும் ஜூன் 10-ம் தேதி வரை இந்த சலுகை வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து