முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ரமலான் மாத சிறப்பு தொழுகைக்கு இரவு 10 மணி வரை அனுமதி: அரசாணை வெளியீடு: முஸ்லீம் லீக் நன்றி

ஞாயிற்றுக்கிழமை, 11 ஏப்ரல் 2021      தமிழகம்
Image Unavailable

Source: provided

சென்னை : தமிழகத்தில் இரவு 8 மணி வரை மட்டுமே வழிபாடு நடத்த அனுமதி என அரசு அறிவித்திருந்த நிலையில் ரமலான் மாதத்தில் சிறப்பு தொழுகை நடத்த ஒரு மாதம் இரவு 10 மணி அவரை அனுமதிக்க இஸ்லாமிய இயக்கங்கள் வைத்த கோரிக்கையை ஏற்று அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

தமிழகத்தில் கடந்த 2 வாரங்களாக கொரோனா தொற்று வேகமாக பரவும் நிலையில் அதனை கட்டுப்படுத்த மீண்டும் புதிய கட்டுபாடுகளை அரசு அறிவித்தது.  இந்த மாதம் 14-ம் தேதி முதல் ரமலான் நோன்பு தொடங்குவதால் அடுத்த 30 நாட்கள் நோன்பு காலத்தில் தராவீஹ் எனப்படும் சிறப்புத் தொழுகை இரவு 8 மணிக்கு தொடங்கி 10 மணி வரை நடக்கும். 

இதனால் நோன்புக் காலமான 30 நாட்களுக்கு வழிப்பாட்டுக்கான தடை நேரத்தை இரவு 10 மணி வரை என மாற்ற வேண்டும் என இஸ்லாமிய இயக்கங்கள் கோரிக்கை வைத்தன. இதை ஏற்று 8 மணி என்பதை இரவு 10 மணி வரை என அரசாணை வெளியிடப்பட்டது.  இஸ்லாமிய மக்களின் கோரிக்கையை ஏற்றதற்கு அரசுக்கு இந்திய யூனியன் முஸ்லீம் லீக் தலைவர் காதர் மொகிதீன் நன்றி தெரிவித்துள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து