முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பல்லடம் தொகுதி அ.தி.மு.க. வேட்பாளர் எம்.எஸ்.எம். ஆனந்தனுக்கு கொரோனா

ஞாயிற்றுக்கிழமை, 11 ஏப்ரல் 2021      தமிழகம்
Image Unavailable

Source: provided

திருப்பூர் : திருப்பூர் மாவட்டம் பல்லடம் சட்டசபை தொகுதி அ.தி.மு.க. வேட்பாளருக்கு கொரோனா நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டது.

திருப்பூர் மாவட்டம், பல்லடம் சட்டசபை தொகுதியில் அ.தி.மு.க. சார்பில் முன்னாள் அமைச்சர் எம்.எஸ்.எம். ஆனந்தன் (64), போட்டியிட்டார். இவர் சட்டசபை தேர்தலின் போது, தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டிருந்தார். இந்த நிலையில் கடந்த 6-ம் தேதி வாக்குப்பதிவு நிறைவடைந்த நிலையில் கடந்த 2 நாட்களாக காய்ச்சல், சளியால் அவதிப்பட்டுள்ளார்.

இதையடுத்து, கோவையில் உள்ள தனியார் மருத்துவமனையில் பரிசோதனை மேற்கொண்டார். இதில், அவருக்கு கொரோனா நோய்த்தொற்று இருப்பது உறுதிசெய்யப்பட்டதைத் தொடர்ந்து அவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். மேலும், அவருடன் தொடர்பில் இருந்த நபர்களுக்கும் மருத்துவப் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து