முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

131-வது பிறந்த நாள்: சென்னையில் அ.தி.மு.க. சார்பில் அம்பேத்கரின் திருவுருவ சிலைக்கு 14-ம் தேதி மாலையணிவித்து மரியாதை: இ.பி.எஸ். - ஓ.பி.எஸ். அறிவிப்பு

ஞாயிற்றுக்கிழமை, 11 ஏப்ரல் 2021      தமிழகம்
Image Unavailable

Source: provided

சென்னை : அம்பேத்கரின் 131-வது பிறந்த நாளையொட்டி வரும் 14-ம் தேதி சென்னை ஆற்காடு சாலையில் அமைந்துள்ள அவரது திருவுருவ சிலைக்கு அ.தி.மு.க. சார்பில் மாலையணிவித்து மரியாதை செலுத்தப்படவுள்ளதாக கட்சியின் ஒருங்கிணப்பாளர்களான முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் ஆகியோர் தெரிவித்துள்ளனர். 

இது குறித்து அ.தி.மு.க. தலைமை கழகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறப்பட்டிருப்பதாவது, 

சட்ட மேதை அண்ணல் டாக்டர் அம்பேத்கரின் 131-வது பிறந்த நாளான 14.4.2021 - புதன் கிழமை காலை 10 மணியளவில், சென்னை, ஆற்காடு சாலையில் அமைந்துள்ள டாக்டர் அம்பேத்கரின் திருவுருவச் சிலைக்கு, அ.தி.மு.க. சார்பில்,  நிர்வாகிகள் மாலை அணிவித்து மரியாதை செலுத்த உள்ளனர்.   

இந்நிகழ்ச்சியில் பங்கேற்கும் அ.தி.மு.க. நிர்வாகிகள் அனைவரும், கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்காக அரசு அறிவித்திருக்கும் வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றியும், சமூக இடைவெளியை கடைப்பிடித்தும், முகக் கவசம் அணிந்தும், இன்னபிற தற்காப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டும் பங்குபெறுமாறு கேட்டுக் கொள்கிறோம்.

இவ்வாறு அந்த அறிவிப்பில் கட்சியின் ஒருங்கிணைப்பாளர்களான முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ. பன்னீர் செல்வம் ஆகியோர் தெரிவித்துள்ளனர். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து