முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நாடு முழுவதும் தடுப்பூசி திருவிழா தொடங்கியது: அதிகம் பேருக்கு ஊசி போட திட்டம்

ஞாயிற்றுக்கிழமை, 11 ஏப்ரல் 2021      இந்தியா
Image Unavailable

Source: provided

புதுடெல்லி : நாடுமுழுவதும் தடுப்பூசி திருவிழா நேற்று தொடங்கியது. அடுத்து வரும் 4 நாட்களுக்கு நடக்கும் இதில் அதிகம் பேருக்கு ஊசிபோட திட்டமிடப்பட்டுள்ளது. 

நாடுமுழுவதும் கொரோனா தொற்று தொடர்ந்து அதிகரித்து வருகிறது. நோய் பரவலை கட்டுப்படுத்த மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துள்ளது. மாநில அரசுகளுக்கு அவ்வப்போது புதிய உத்தரவுகளை பிறப்பித்து வருகிறது. 

தற்போதைய நிலையில் கொரோனா விதிமுறைகளை சரியாக பின்பற்றினால் மட்டுமே நோய் கட்டுக்குள் வரும் என்ற நிலை உள்ளது. அத்துடன் தடுப்பூசி போடுவதை அதிகரித்ததாலும் இதன் பரவல் குறைய ஆரம்பித்துள்ளது. 

எனவே தடுப்பூசி திட்டத்தையும் வேகப்படுத்த மத்திய அரசு முடிவு செய்துள்ளது. ஏற்கனவே அரசு ஆஸ்பத்திரிகள் மற்றும் முக்கிய தனியார் ஆஸ்பத்திரிகளில் தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. ஆனாலும் எதிர்பார்த்த அளவுக்கு பொதுமக்கள் தடுப்பூசியை போட்டுக் கொள்ளவில்லை. ஜனவரி மாதம் 16-ம் தேதி தடுப்பூசி போடுவது தொடங்கப்பட்டது.

இந்தியாவில் கோவிஷீல்டு, கோவேக்சின் ஆகிய தடுப்பூசிகள் போடப்பட்டு வருகின்றன. ஆரம்ப கட்டத்தில் தடுப்பூசி போட்டு கொள்வதற்கு மக்கள் தயக்கம் காட்டினார்கள். ஆனால் இப்போது நோய் பரவல் அதிகரித்திருப்பதை அடுத்து அச்சம் அடைந்துள்ள பொதுமக்கள் பலரும் தாமாக முன்வந்து ஊசி போட்டுக் கொள்கிறார்கள். 

இதன் காரணமாக தற்போது ஊசி போட்டுக் கொண்டவர்களுடைய எண்ணிக்கை 10 கோடியை தாண்டியுள்ளது. ஆனாலும் இது போதாது, இன்னும் அதிகம் பேர் ஊசி போட்டுக் கொண்டால்தான் பரவல் கட்டுக்குள் வரும் என்று கருதப்படுகிறது.எனவே பொதுமக்கள் ஆர்வத்துடன் வந்து ஊசி போட்டுக் கொள்ள வசதியாக பிரதமர் மோடி நேற்று முதல் 4 நாட்களுக்கு தடுப்பூசி திருவிழாவை நடத்த உத்தரவிட்டுள்ளார். 

இதற்காக ஏற்னவே ஊசி போடப்பட்டு வந்த அரசு ஆஸ்பத்திரிகள், தனியார் ஆஸ்பத்திரிகள் எண்ணிக்கை அதிகப்படுத்தப்பட்டுள்ளது. அத்துடன் ஒவ்வொரு மாநிலத்திலும் சிறப்பு முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன.  ஆரம்ப சுகாதார நிலையங்கள், பள்ளிகள், சமூக கூடங்கள் ஆகியவற்றில் சிறப்பு முகாம் அமைக்கப்பட்டுள்ளது. 4 நாட்களும் இவை செயல்படும். பொதுமக்கள் அதிகம் பேர் வந்து ஊசி போட்டுக்கொள்ள வேண்டும் என்பதற்கக பிரச்சாரங்களும் செய்யப்படுகின்றன. 

பல இடங்களில் சுகாதார ஊழியர்கள் நேரடியாக வீடுகளுக்கு சென்று அழைப்பு விடுத்தனர். இதனால் இந்த மையங்களில் அதிகம் பேர் ஊசி போட்டுக் கொண்டனர்.  தடுப்பூசி திருவிழாவில் பல லட்சம் பேர் ஊசி போட்டுக் கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மக்கள் ஒட்டுமொத்த மாக வந்து ஊசி போடுவதால் மருந்து வீணாவதும் தடுக்கப்படும். தடுப்பூசி திருவிழா நடைபெறும் அதே நேரத்தில் தடுப்பூசி தட்டுப்பாடு ஏற்பட்டிருப்பதாக பல மாநிலங்கள் குற்றம்சாட்டி உள்ளன. 

பஞ்சாப், ராஜஸ்தான், மராட்டிய மாநிலம் ஆகியவற்றில் கொரோனா தடுப்பூசி வேகமாக தீர்ந்து வருவதாக கூறியிருக்கிறார்கள். பஞ்சாப் முதல்வர் அமீர்ந்தர் சிங், ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட் அடுத்த 2 நாட்களுக்கு மட்டுமே தடுப்பூசி இருப்பு இருப்பதாக கூறியிருக்கிறார்கள். 

டெல்லியில் 10 நாட்களுக்கு மட்டுமே இருப்பு இருப்பதாக முதல்வர்  கெஜ்ரிவால் கூறியுள்ளார். ஜார்க்கண்ட் மாநிலத்தில் 2 நாட்களுக்கு மட்டுமே தடுப்பூசி இருப்பு இருக்கிறது.

எனவே 10 லட்சம் தடுப்பூசிகளை அவசரமாக அனுப்ப வேண்டும் என்று கேட்டுள்ளனர். தமிழகத்தில் அந்தந்த மாவட்டத்தில் தடுப்பூசி திருவிழா என்று அறிவித்து தகுதிவாய்ந்த நபர்களுக்கு தடுப்பூசி போடுவதற்கான நடவடிக்கையும் எடுக்க முடிவெடுக்கப்பட்டுள்ளது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago
View all comments

வாசகர் கருத்து