முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கொரோனா பாதிப்பு எதிரொலி : காணொலி காட்சியில் வழக்குகளை விசாரிக்க சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள் திட்டம்

திங்கட்கிழமை, 12 ஏப்ரல் 2021      இந்தியா
Image Unavailable

Source: provided

புதுடெல்லி : சுப்ரீம் கோர்ட் ஊழியர்களில் 50 சதவீதத்துக்கும் மேற்பட்டோருக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் காணொலி காட்சி மூலம் வழக்குகளை விசாரிக்க சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள் திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது.

இந்தியாவில் கொரோனா இரண்டாவது அலை ஏற்பட்டுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் நாடு முழுவதும் 1,68,912 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. அதேபோல் கடந்த 24 மணி நேரத்தில் 904 பேர் கொரோனா தொற்றுக்கு பலியாகியுள்ளனர். தலைநகர் டெல்லியில் கடந்த 24 மணி நேரத்தில் 10,774 பேருக்குக் கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. உலகளவில் கொரோனா பரவலில் இந்தியா முதலிடம் பிடித்திருக்கிறது.

இந்நிலையில் சுப்ரீம் கோர்ட் ஊழியர்கள் 50 சதவீதத்துக்கும் மேற்பட்டோருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளதாகக் கூறப்படுகிறது. இதனால், சுப்ரீம் கோர்ட் வளாகம், அறைகள் முழுவதுமே கிருமிநாசினி மூலம் சுத்தப்படுத்தப்பட்டு வருகிறது.

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக, பல நீதிபதிகளும் இனி முன்புபோல் காணொலியில் விசாரணையை வீட்டிலிருந்தே நடத்தப் போவதாக தகவல் வெளியாகியுள்ளது.

அதே வேளையில் நேற்று காலை 10.30 மணியளவில் நடைபெறவிருந்த விசாரணை 11.30 மணிக்கும், 11 மணிக்கு நடைபெறவிருந்த விசாரணை 12 மணிக்கும் மாற்றிவைக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து