முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பீகாரில் நோயாளியின் உடலை மாற்றிய அவலம்

திங்கட்கிழமை, 12 ஏப்ரல் 2021      இந்தியா
Image Unavailable

பீகாரின் பாட்னா மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் கடந்த 3-ந் தேதி சுன்னு குமார் (வயது 40) என்பவர் அனுமதிக்கப்பட்டார். ஆனால் அவர் கொரோனா பாதிப்புகளால் உயிரிழந்து விட்டார் என அவரது உறவினர்களிடம் தெரிவிக்கப்பட்டது. 

அதன்பின் தகனமேடைக்கு உடலை எடுத்து சென்ற உறவினர்கள் இறுதியாக அவரை பார்த்துள்ளனர். அதில் வேறொருவரின் முகம் தெரிந்து அதிர்ச்சி அடைந்தனர். அவர்களிடம் ஒப்படைக்கப்பட்ட உடல் வேறு யாரோ ஒருவருடையது என தெரிய வந்தது. 

இதன்பின் நடந்த விசாரணையில் சுன்னு குமார் மருத்துவமனையில் இருந்துள்ளார் என்றும் மற்றொரு நோயாளியின் உடலை அவரது குடும்பத்தினரிடம் ஒப்படைத்து உள்ளனர் என தெரிய வந்தது. இதனால் அவரது உறவினர்கள் ஆத்திரமடைந்தனர். இந்த விவகாரத்தில் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மருத்துவமனையின் கண்காணிப்பாளர் டாக்டர் ஐ.எஸ். தாக்குர் கூறியுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து