முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மே 3-ம் தேதி நடக்கவிருந்த 12-ம் வகுப்பு மொழிப்பாட தேர்வு தேதி மட்டும் மாற்றம்

திங்கட்கிழமை, 12 ஏப்ரல் 2021      தமிழகம்
Image Unavailable

Source: provided

சென்னை : 12ஆம் வகுப்பு பொதுத் தேர்வின் அட்டவணையில் மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.அதாவது மே 3ஆம் தேதி நடைபெறவிருந்த முதலாவது(மொழிப்பாடம்) தேர்வு மே 31ஆம் தேதிக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

இதுகுறித்து தேர்வுகள் இயக்ககம் வெளியிட்ட செய்தியில்,2020-2021ஆம் கல்வியாண்டில் 12ஆம் வகுப்பு பொதுத் தேர்வு மே 3 முதல் 21 வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

தற்சமயம் சட்டப்பேரவைத் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை மே 2-ல் நடைபெறுவதால் மே 3-ல் நடைபெறுவதாக இருந்த மொழிப்பாடத்தேர்வு மட்டும் மே 31ஆம் தேதி நடைபெறும்.இதர தேர்வுகள் ஏற்கனவே அறிவிக்கப்பட்ட தேதிகளிலேயே நடைபெறும் என அறிவித்துள்ளனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து