முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சரத் பவார் உடல் நிலை சீராக உள்ளது: நவாப் மாலிக்

திங்கட்கிழமை, 12 ஏப்ரல் 2021      இந்தியா
Image Unavailable

Source: provided

மும்பை : தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார் உடல்நலக்குறைவு காரணமாக கடந்த மாதம் 30-ந் தேதி மும்பையில் உள்ள ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அப்போது அவருக்கு எண்டோஸ்கோபி பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில் அவருக்கு பித்தப்பை கல் இருப்பது தெரியவந்தது. 

மருத்துவ நடைமுறைகளுக்குப் பின்னா், அவருக்கு 15 நாள்களுக்குப் பிறகு பித்தப்பையை நீக்குவதற்கான அறுவைச் சிகிச்சையை மேற்கொள்வது என மருத்துவா்கள் தீா்மானித்தனா்.அதன்படி, அவா் தனியாா் மருத்துவமனையில் அவா் நேற்று மீண்டும் அனுமதிக்கப்பட்டாா். சரத் பவாருக்கு பித்தப்பை அறுவைச் சிகிச்சை இன்று வெற்றிகரமாக முடிந்தது. 

இதுகுறித்து அக்கட்சியின் செய்தித் தொடர்பாளர் நவாப் மாலிக் தனது டுவிட்டரில் கூறுகையில் “எங்கள் கட்சியின் தலைவர் சரத் பவாருக்கு பித்தப்பை அறுவைச் சிகிச்சை வெற்றிகரமாக நடத்தப்பட்டது. அவரது உடல்நிலை சீராக உள்ளது. தற்போது அவர் குணமடைந்து வருகிறார். இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து