முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நாட்டின் 24-வது புதிய தலைமை தேர்தல் ஆணையராக சுசில் சந்திரா பதவியேற்பு

செவ்வாய்க்கிழமை, 13 ஏப்ரல் 2021      இந்தியா
Image Unavailable

Source: provided

புதுடெல்லி : நாட்டின் 24-வது புதிய தலைமை தேர்தல் ஆணையராக நியமிக்கப்பட்டுள்ள சுசில் சந்திரா நேற்று பதவியேற்றுக் கொண்டார்.

இந்திய தலைமை தேர்தல் ஆணையராக பதவி வகித்து வந்த சுனில் அரோரா நேற்று முன்தினம் ஓய்வு பெற்றார். அவரது பணிக் காலத்தில், அசாம், தமிழகம், கேரளா, புதுச்சேரி ஆகிய மாநிலங்களின் சட்டசபை தேர்தல் நடத்தி முடிக்கப்பட்டுள்ளது. மேற்கு வங்காள சட்டசபை தேர்தலில் 4-ம் கட்ட வாக்குப்பதிவு முடிந்துள்ளது.

இந்த நிலையில், புதிய தலைமை தேர்தல் ஆணையராக தற்போதைய தேர்தல் ஆணையர் சுசில் சந்திரா நேற்று முன்தினம் நியமிக்கப்பட்டார். இத்தகவலை மத்திய சட்ட அமைச்சகம் தெரிவித்தது.  இந்நிலையில் டெல்லியில் நேற்று 24-வது இந்தியத் தலைமைத் தேர்தல் ஆணையராக சுசில் சந்திரா பதவியேற்றுக் கொண்டார்.

இவர் 2022-ம் ஆண்டு மே மாதம் 14-ம் தேதி வரை தலைமை தேர்தல் ஆணையராக பணியாற்றுவார். அவரது தலைமையில் கோவா, மணிப்பூர், உத்தரகாண்ட், பஞ்சாப், உத்தரபிரதேசம் ஆகிய 5 மாநிலங்களுக்கு தேர்தல் கமிஷன் அடுத்த ஆண்டு சட்டசபை தேர்தல் நடத்த உள்ளது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து