முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தேர்தல் ஆணைய தடை உத்தரவுக்கு எதிர்ப்பு: தர்ணாவில் ஈடுபட்டார் மம்தா பானர்ஜி

செவ்வாய்க்கிழமை, 13 ஏப்ரல் 2021      இந்தியா
Image Unavailable

Source: provided

கொல்கத்தா : தேர்தல் ஆணையத்தின் 24 மணி நேர பிரச்சார தடை உத்தரவுக்கு எதிர்ப்பு தெரிவித்து மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார்.

இந்த போராட்டத்தின் போது மம்தா பானர்ஜி ஓய்வு எடுத்து கொள்ளாமல், நாற்காலியில் அமர்ந்தபடி வரிசையாக படங்களை வரைந்து தனது ஓவிய திறமையை வெளிப்படுத்தினார்.

மேற்கு வங்காள சட்டசபைக்கு 8 கட்டங்களாக தேர்தல் நடைபெற்று வருகிறது.  கடந்த மார்ச் 27-ம் தேதி முதற்கட்ட தேர்தல் நடந்தது.  அடுத்த கட்ட தேர்தல் வருகிற 17-ம் தேதி நடைபெற உள்ளது.

தேர்தல் நடந்து வரும் சூழலில், அம்மாநில முதல்வர் மம்தா பானர்ஜி தேர்தல் கமிஷன், மத்திய படைகளை தொடர்ந்து குற்றம் சாட்டி வந்தார். அமித்ஷாவின் கட்டளைப்படி செயல்படுவதாக மத்திய படைகள் மீதும் குற்றச்சாட்டும் கூறி வந்தார்.  இதற்கு தேர்தல் கமிஷனும் கண்டனம் தெரிவித்து இருந்தது. 

இந்த நிலையில் தேர்தல் பிரச்சார கூட்டம் ஒன்றில் பேசிய மம்தா பானர்ஜி, சர்ச்சைக்குரிய வகையில் மத மோதலை தூண்டும் வகையில் பேசியதாக தெரிகிறது.  இது தொடர்பாக மத்திய அமைச்சர் முக்தார் அப்பாஸ் நக்வி தேர்தல் கமிஷனில் புகார் செய்தார். 

இதைத் தொடர்ந்து மத்திய படைகளுக்கு எதிரான மம்தாவின் கருத்துகள் மற்றும் இந்த வகுப்புவாத கருத்துகளுக்காக மம்தா பானர்ஜிக்கு ஒருநாள் (24 மணி நேரம்) பிரச்சாரம் செய்ய தேர்தல் கமிஷன் நேற்று முன்தினம் அதிரடியாக தடை விதித்தது. இந்த தடை நேற்று முன்தினம் இரவு 8 மணி முதல் நேற்று இரவு 8 மணி வரை அமலில் இருக்கும் என தேர்தல் கமிஷன் அறிவித்தது.

இந்த நிலையில், தேர்தல் ஆணையத்தின் 24 மணி நேர பிரச்சார தடை உத்தரவுக்கு எதிர்ப்பு தெரிவித்து கொல்கத்தா நகரில் காந்தி மூர்த்தி பகுதியில், நேற்று மதியம் 12 மணியில் இருந்து முதல்வர் மம்தா பானர்ஜி தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார்.

எனினும், தர்ணா போராட்டத்தில் ஈடுபட்ட மம்தா பானர்ஜி ஓய்வு எடுத்து கொள்ளாமல், நாற்காலியில் அமர்ந்தபடி வரிசையாக படங்களை வரைந்து தனது ஓவிய திறமையை வெளிப்படுத்தினார்.  பின்னர் அவற்றை செய்தியாளர்களிடம் காட்டினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து