முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கேரளாவில் காலியாகும் 3 மாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கு தேர்தல் தேதி அறிவிப்பு

செவ்வாய்க்கிழமை, 13 ஏப்ரல் 2021      இந்தியா
Image Unavailable

கேரள மாநிலத்தில் இருந்து பாராளுமன்ற மாநிலங்களவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட அப்துல் வகாப் (இந்திய யூனியன் முஸ்லிம் லீக்), கே.கே.ராகேஷ் (மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு), வயலார் ரவி (காங்கிரஸ்) ஆகியோரின் பதவிக்காலம் வரும் 21-ம் தேதி முடிவடைகிறது. 

இந்நிலையில் அந்த இடங்களுக்கான தேர்தல் இம்மாதம் 30-ம் தேதி நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. 

இதற்கான அறிவிக்கை வெளியிடப்படும் என்றும், ஏப்ரல் 30-ம் தேதி காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை தேர்தல் நடைபெறும் என்றும், அன்றைய தினமே வாக்குகள் எண்ணப்படும் என்றும் அறிவிக்கப்பட்டு உள்ளது. 

கேரளாவில் தற்போது காலியாகும் 3 இடங்களுக்கு கடந்த 12-ம் தேதி தேர்தல் நடைபெறவிருந்தது. ஆனால் அந்த தேர்தலை தேர்தல் ஆணையம் திடீரென நிறுத்திவைத்திருந்தது. 

இதற்கிடையே குறிப்பிட்ட 3 இடங்களுக்கான தேர்தலை நடத்த தேர்தல் ஆணையத்துக்கு கேரள ஐகோர்ட்டு அறிவுறுத்தியதைத் தொடர்ந்து இந்த அறிவிப்பை தேர்தல் ஆணையம் வெளியிட்டிருக்கிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து