முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இந்திய பல்கலைக் கழகங்கள் சங்க 95-வது ஆண்டு கூட்டம்: பிரதமர் மோடி இன்று உரையாற்றுகிறார்

செவ்வாய்க்கிழமை, 13 ஏப்ரல் 2021      இந்தியா
Image Unavailable

Source: provided

புதுடெல்லி : இந்திய பல்கலைக்கழகங்கள் சங்கத்தின் 95-வது ஆண்டு கூட்டம் மற்றும் துணைவேந்தர்களின் தேசியக் கருத்தரங்கில் பிரதமர் மோடி இன்று உரையாற்றுகிறார்.

நாட்டின் உயர்கல்வி முன்னணி அமைப்பான இந்திய பல்கலைக் கழகங்கள் சங்கம், தனது 95-வது ஆண்டு கூட்டத்தை இந்தாண்டு இன்று 14, நாளை 15-ம் தேதிகளில் நடத்துகிறது.

இந்திய பல்கலைக் கழகங்கள் சங்கம், தனது கடந்த கால சாதனைகளை தெரிவிக்கவும், தனது நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்யவும், வருங்காலத்துக்கான திட்ட நடவடிக்கைகளை வரையறுக்கும் நிகழ்வாக இந்தக் கூட்டம் உள்ளது. மண்டல அளவில் நடந்த துணைவேந்தர்கள் கூட்டங்களின் பரிந்துரைகளை மற்றும் ஆண்டு முழுவதும் நடத்தப்பட்ட ஆலோசனைகளை தெரிவிக்கும் தளமாகவும் இந்நிகழ்ச்சி உள்ளது.

டாக்டர் சர்வேபள்ளி ராதாகிருஷ்ணன் மற்றும் டாக்டர் ஷ்யாம் பிரசாத் முகர்ஜி போன்ற தலைவர்களால் 1925-ம் ஆண்டு நிறுவப்பட்ட இந்திய பல்கலைக் கழகங்கள் சங்கத்தின் 96-வது நிறுவன தினத்தை இந்தக் கூட்டம் கொண்டாடுகிறது.  இந்தியாவின் உயர் கல்வியை மாற்றும் தேசிய கல்விக் கொள்கை-2020-ஐ அமல்படுத்துவது பற்றிய துணைவேந்தர்களின் தேசியக் கருத்தரங்கமும் இந்தக் கூட்டத்தில் நடத்தப்படுகிறது.

மாணவர்களின் நலனுக்கான கொள்கையை, திறம்பட செயல்படுத்துவதற்கான தெளிவான செயல் திட்டத்துடன், சமீபத்தில் தொடங்கப்பட்ட தேசிய கல்விக் கொள்கை-2020 உத்திகளை அமல்படுத்துவதை, இது நோக்கமாகக் கொண்டுள்ளது. 

இந்திய பல்கலைக்கழகங்கள் சங்கத்தின் 95-வது ஆண்டு கூட்டம் மற்றும் துணைவேந்தர்களின் தேசியக் கருத்தரங்கில் பிரதமர் நரேந்திர மோடி இன்று 14-ம் தேதி அன்று காலை 11 மணிக்கு காணொலி மூலம் உரையாற்றுகிறார்.  

கிஷோர் மக்வானா எழுதிய டாக்டர் பி.ஆர். அம்பேத்கர் தொடர்பான நான்கு புத்தகங்களையும் அவர் வெளியிடுகிறார். குஜராத் கவர்னர், முதல்வர் மற்றும் மத்திய கல்வி அமைச்சர் ஆகியோர் இந்நிகழ்ச்சியில் பங்கேற்கின்றனர். அகமதாபாத்தில் உள்ள டாக்டர் பாபாசாகிப் அம்பேத்கர் திறந்தவெளி பல்கலைக் கழகம் இந்நிகழ்ச்சியை நடத்துகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து