முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

எம்.பி.பி.எஸ். மாணவர்களை கொரோனா பணியில் ஈடுபடுத்த உ.பி. அரசு முடிவு

புதன்கிழமை, 14 ஏப்ரல் 2021      இந்தியா
Image Unavailable

Source: provided

லக்னோ : எம்.பி.பி.எஸ். மாணவர்களை கொரோனா பணியில் ஈடுபடுத்த உத்தர பிரதேச அரசு முடிவு செய்துள்ளது.

உத்தர பிரதேசத்தில் கொரோனா வைரஸ் தொற்றின் தாக்கம் 2-வது அலையில் அதிகமாக உள்ளது.  உத்தர பிரதேசத்தில் 7,23,582 பேர் இதுவரை கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். 

இந்த நிலையில்,  அவசரகாலத் தேவைக்காக, உத்தரப்பிரதேச மாநிலத்தில், எம்.பி.பி.எஸ். நான்காம் மற்றும் ஐந்தாம் ஆண்டு பயிலும் மாணவர்களை கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும் பணியில் ஈடுபடுத்த அந்த மாநில அரசு முடிவு செய்துள்ளது.

எம்.பி.பி.எஸ். மாணவர்களுக்கான தேர்வுகள் ரத்து செய்யப்பட்ட நிலையில், அந்த மாணவர்களை கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும் பணியில் ஈடுபடுத்தும் முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

எம்.பி.பி.எஸ். நான்காம் மற்றும் ஐந்தாம் ஆண்டு பயிலும் மாணவர்கள் கொரோனா சிகிச்சைப் பிரிவில் பணியாற்ற ஈடுபடுத்தப்படுவதன் மூலம், பணியிலிருக்கும் மருத்துவர்களுக்கு ஓரளவுக்கு பணிச்சுமை குறைக்கப்படும் என்று உ.பி. அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து