முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தமிழகத்தில் அதிகரிக்கும் கொரோனா பாதிப்பு: சுகாதார துறை அதிகாரிகளுடன் இன்று தலைமைச் செயலாளர் ஆலோசனை: கூடுதல் கட்டுப்பாடுகள் விதிப்பது குறித்து முடிவு:

வியாழக்கிழமை, 15 ஏப்ரல் 2021      தமிழகம்
Image Unavailable

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு 8000 நெருங்கிய நிலையில், மேலும் கட்டுப்பாடுகள் தேவையா என்பது குறித்து சுகாதாரத்துறை அதிகாரிகளுடன் தலைமைச்செயலாளர் இன்று ஆலோசனை நடத்த உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

தமிழகத்தில் கொரோனா வைரஸ் கடந்த ஆண்டு மார்ச் மாதம் 7-ம் தேதி நுழைந்தது.  இந்த நிலையில் கொரோனா வைரசின் 2-வது அலை நிலவி வருகிறது. தமிழகத்தில் கொரோனா வைரசால் பாதிக்கப்படுகிறவர்களின் எண்ணிக்கை படிப்படியாக மீண்டும் அதிகரிக்க தொடங்கி உள்ளது.  நேற்று முன்தினம் ஒரே நாளில் இதுவரை இல்லாத அளவுக்கு புதிய உச்சமாக 7 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 

இந்த நிலையில், தமிழகத்தில் தினசரி கொரோனா பாதிப்பு 8 ஆயிரத்தை நெருங்கிய நிலையில் மேலும் கூடுதல் கட்டுப்பாடு தேவையா என்பது பற்றி சுகாதாரத்துறை அதிகாரிகளுடன் தலைமைச்செயலாளர் ராஜீவ் ரஞ்சன் இன்று ஆலோசனை நடத்த உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.  இந்த ஆலோசனை கூட்டத்தில் மேலும் கூடுதல் கட்டுப்பாடுகள் விதிப்பது குறித்து முடிவு எடுக்கலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து