முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பஞ்சாபில் 5, 8, 10-ம் வகுப்பு மாணவர்கள் தேர்வின்றி ஆல் பாஸ்: முதல்வர் அம்ரிந்தர்சிங்

வியாழக்கிழமை, 15 ஏப்ரல் 2021      இந்தியா
Image Unavailable

கொரோனா பரவல் காரணமாக பஞ்சாபில் 5, 8, 10-ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு ரத்து செய்யப்பட்டுள்ளதாகவும் அவர்கள் தேர்வின்றி அடுத்த வகுப்புகளுக்குச் செல்வார்கள் என்றும் அம்மாநில முதல்வர் அம்ரிந்தர் சிங் தெரிவித்துள்ளார்.  அதே நேரத்தில் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு சூழலை பொறுத்து பின்னர் நடத்தப்படும் என்றும் அவர் கூறினார்.

மேலும், 5 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு, 5 பாடங்களில் 4 பாடங்களுக்கு ஏற்கெனவே தேர்வுகள் நடத்தப்பட்டுள்ளதால் அதன் அடிப்படையில் மதிப்பெண்களை மதிப்பிடலாம். அதே போன்று 8 மற்றும் 10-ம் வகுப்புகளுக்கு முந்தைய தேர்வுகளின் அடிப்படையில் பஞ்சாப் கல்வி வாரியம் மதிப்பெண்களை நிர்ணயிக்கலாம் என்று கூறியுள்ளார்.

முன்னதாக மாநிலத்தில் கொரோனா பாதிப்பு குறித்து அதிகாரிகள் மற்றும் மருத்துவ நிபுணர்களுடன் முதல்வர்  ஆலோசனை நடத்தினார். ஆலோசனைக் கூட்டத்தில் மாணவர்களின் தேர்வு குறித்து இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து