எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
ஐ.பி.எல் கிரிக்கெட் தொடரின் 6-வது லீக் ஆட்டத்தில் பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் அணியை 6 ரன்கள் வித்தியாசத்தில் சன்ரைஸர்ஸ் ஐதராபாத் அணியை வீழ்த்தி தனது 2-வது வெற்றியை பதிவு செய்துள்ளது.
சென்னையில் புதன்கிழமை நடைபெற்ற ஆட்டத்தில் டாஸ் வென்ற ஐதராபாத் அணி பீல்டிங்கை தேர்வு செய்தது. இதையடுத்து பேட் செய்த பெங்களூர் அணியின் இன்னிங்ûஸ கேப்டன் விராட் கோலியும், தேவ்தத் படிக்கலும் தொடங்கினர். புவனேஸ்வர் குமார் வீசிய முதல் ஓவரின் 2-வது பந்தில் பவுண்டரியை விளாசி ரன் கணக்கைத் தொடங்கினார் கோலி. ஆனால் இந்த ஜோடி நிலைக்கவில்லை. புவனேஸ்வர் குமார் வீசிய 3-வது ஓவரில் நதீமிடம் கேட்ச் ஆனார் படிக்கல். அவர் 13 பந்துகளில் 11 ரன்கள் எடுத்தார்.
இதையடுத்து களம்புகுந்த ஷாபாஸ் அஹமது 10 பந்துகளில் 14 ரன்கள் சேர்த்த நிலையில் விக்கெட்டை பறிகொடுத்தார். இதன்பிறகு கேப்டன் கோலியுடன் இணைந்தார் கிளன் மேக்ஸ்வெல். இந்த ஜோடி சற்று நிதானமாக ஆட, பெங்களூரின் ரன் வேகம் குறைந்தது. இதனால் முதல் 10 ஓவர்களில் 63 ரன்களே எடுத்திருந்தது பெங்களூர்.
நதீம் வீசிய 11-வது ஓவரின் முதல் 3 பந்துகளில் மேக்ஸ்வெல் இரு சிக்ஸர்களையும், ஒரு பவுண்டரியையும் விளாச, பெங்களூரின் ஸ்கோர் உயர ஆரம்பித்தது. அந்த அணி 12.1 ஓவர்களில் 91 ரன்கள் எடுத்திருந்தபோது கோலியின் விக்கெட்டை இழந்தது. அவர் 29 பந்துகளில் 33 ரன்கள் சேர்த்த நிலையில், ஹோல்டர் பந்துவீச்சில் விஜய் சங்கரிடம் கேட்ச் ஆனார்.
பின்னர் வந்த டிவில்லியர்ஸ் 1, வாஷிங்டன் சுந்தர் 8, டேன் கிறிஸ்டியான் 1, கைல் ஜேமிசன் 12 ரன்களில் வெளியேறினர். ஒருபுறம் விக்கெட் விழுந்தாலும், மறுபுறம் அதிரடியாக ஆடிய மேக்ஸ்வெல் 38 பந்துகளில் அரை சதம் கண்டார். அவர் 41 பந்துகளில் 3 சிக்ஸர், 5 பவுண்டரிகளுடன் 59 ரன்கள் சேர்த்து கடைசிப் பந்தில் ஆட்டமிழக்க, பெங்களூர் அணி 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 149 ரன்கள் சேர்த்தது. ஐதராபாத் தரப்பில் ஜேசன் ஹோல்டர் 4 ஓவர்களில் 30 ரன்களைக் கொடுத்து 3 விக்கெட்டுகளை சாய்த்தார்.
பின்னர் ஆடிய ஐதராபாத் அணியில் ரித்திமான் சாஹா 1 ரன்னில் வெளியேற, கேப்டன் டேவிட் வார்னருடன் இணைந்தார் மணீஷ் பாண்டே. இந்த ஜோடி வேகமாக ரன் சேர்க்க, ஹைதராபாதின் ஸ்கோர் உயர்ந்தது. 31 பந்துகளில் அரை சதம் கண்ட வார்னர், 37 பந்துகளில் 1 சிக்ஸர், 7 பவுண்டரிகளுடன் 54 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தார்.
இதன்பிறகு வந்த ஜானி பேர்ஸ்டோ 12 ரன்களில் வெளியேற, மணீஷ் பாண்டே 39 பந்துகளில் 38 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தார். இதன்பிறகு அப்துல் ஸமாத் டக் அவுட்டாக, கடைசி 3 ஓவர்களில் 34 ரன்கள் எடுக்க வேண்டிய நிலை ஏற்பட்டது.
இதனிடையே விஜய் சங்கர் 3, ஜேசன் ஹோல்டர் 4 ரன்களில் வெளியேற, ஹைதராபாதின் வெற்றிக்கு கடைசி ஓவரில் 16 ரன்கள் எடுக்க வேண்டியிருந்தது. அந்த ஓவரை வீசிய ஹர்ஷால் படேல் நோபாலை வீச, அதில் ரஷித்கான் பவுண்டரி அடித்தார். இதனால் கடைசி 4 பந்துகளில் 8 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலை ஏற்பட்டது. எனினும் அடுத்த பந்தில் ரஷித்கான் (17 ரன்கள்) ரன் அவுட்டாக, 5-ஆவது பந்தில் நதீம் டக் அவுட்டானார். இதனால் 20 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 143 ரன்கள் மட்டுமே எடுத்து ஐதராபாத் அணி தோல்வி கண்டது .
பெங்களூர் தரப்பில் ஷாபாஸ் அஹமது 2 ஓவர்களில் 7 ரன்களை மட்டுமே கொடுத்து 3 விக்கெட்டுகளை சாய்த்தார்.
4 வருடங்களுக்கு பிறகு....
நடப்பு ஐ.பி.எல் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான முதலாவது ஆட்டத்தில் சேப்பாக்கம் மைதானத்தில் 100 மீட்டருக்கு ஒரு பிரம்மாண்ட சிக்ஸரை விளாசி தனது மீதான விமர்சனங்களுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார். அதிரடியாக ஆடிய மேக்ஸ்வெல் 39 ரன்களை எடுத்து ஆட்டமிழந்தார். ஐதராபாத் பந்துவீச்சில் ஆர்.சி.பி வீரர்கள் ஒரு பக்கம் விக்கெட்டுகளை பறிக்கொடுக்க மேக்ஸ்வெல் தனிஆளாக போராடினார். கடைசி பந்துவரை களத்தில் இருந்த மேக்ஸ்வெல் 59 ரன்கள் விளாசினார். இந்த ஐ.பி.எல் தொடரில் தனது முதல் அரைசதத்தை பதிவு செய்தார்.
2016 ஆண்டுக்கு பிறகு ஐ.பி.எல் கிரிக்கெட்டில் அரைசதம் அடித்துள்ளார். 4 வருடங்களுக்கு பிறகு ஐ.பி.எல் கிரிக்கெட்டில் மேக்ஸ்வெல் அரைசதம் விளாசியுள்ளார். 2019-ம் ஆண்டு மேக்ஸ்வெல் ஐ.பி.எல் போட்டிகளில் விளையாடவில்லை. அதுமட்டும் இல்லை போன வருடம் ஐ.பி.எல் மேக்ஸ்வெல் ஒரு சிக்ஸரை கூட அடிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. மேக்ஸ்வெல்லுக்கு ஐ.பி.எல் கிரிக்கெட்டில் சிறப்பான ஆட்டம் என்றால் அது 2014-ம் ஆண்டு தான். அந்த சீசனில் தான் 552 ரன்களை விளாசினார். அதிகப்பட்சமாக 95 ரன்களை விளாசியிருந்தார்.
நிறைவேறிய கோலியின் விருப்பம்
போட்டிக்கு பின் பேசிய மேக்ஸ்வெல், கோலியும், நானும் எப்போதாவது மெசேஜ் செய்வோம். உரையாடலின் போது ஆர்.சி.பி அணிக்காக விளையாடுவது குறித்து என்னிடம் பேசினார். ஆர்.சி.பி அணியில் உங்களை சேர்க்க விரும்புகிறோம் என்றார். ஐ.பி.எல் ஆக்ஷன் நடந்தபோது மேக்ஸ்வெல் நியூசிலாந்து சுற்றுப்பயணத்தில் இருந்துள்ளார். அவருடன் ஆடம் சாம்பா இருந்துள்ளார். ஆர்.பி.சி அணிக்காக ஏலம் எடுத்த தகவல் மேக்ஸ்வெல்லுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆடம் சாம்பா ஏற்கெனவே ஆர்.சி.பி அணிக்காகத்தான் விளையாடி வருகிறார். தன்னிடம் இருந்த ஆர்.சி.பி தொப்பியை எடுத்து மேக்ஸ்வெல்லுக்கு அணிவித்துள்ளார். அதோடு நிற்காமல் அதனை புகைப்படமாக எடுத்து நான் தான் முதலில் மேக்ஸ்வெல்லை ஆர்.சி.பிக்காக வரவேற்றுள்ளேன் என கோலிக்கு டெக்ஸ்ட் பண்ணியுள்ளார். இதற்கு ரிப்ளே அளித்த கோலி முட்டாள்கள்.. இருந்தாலும் இந்த வழி நன்றாகத்தான் இருக்கிறது” எனக் கமெண்ட் செய்துள்ளார். ஏனென்றால் மேக்ஸ்வெல்லை முதன்முதலில் அணியில் சேர்க்க விரும்பியதே கோலிதான் என்று அவருக்கு தெரியாது.
நம்பிக்கை இழக்காத கோலி
வெற்றிக்கு பின் பெங்களூரு கேப்டன் விராட் கோலி கூறுகையில், நாங்கள் பெருமைப்படுவது போல் ஆடாவிட்டாலும் இது எங்களுக்கு ஒரு சிறந்த விளையாட்டாக இருந்தது. ரன் எடுக்க சவாலாக இருந்தது. இதனை மும்பை-கே.கே.ஆர் போட்டியின் போது பார்த்தோம். நாங்கள் ஒருபோதும் நம்பிக்கை இழக்கவில்லை. நடுத்தர ஓவர்கள் தாக்கத்தை ஏற்படுத்தின.
149 ரன்கள் எடுத்தாலும் சேசிங்கில் ரன் எடுக்க கடினமாக இருக்கும் என்பதால் வெல்ல முடியும் என சொன்னேன். தொடக்கத்தில் நாங்கள் அதிக ரன் அடிக்காவிட்டாலும் மேக்ஸ்வெல் சிறப்பாக ஆடினார். அவரின் இன்னிங்ஸ் எங்களுக்கு வித்தியாசம் என்று நினைக்கிறேன். உண்மையாக சொல்வதென்றால் இந்த வெற்றியால் நாங்கள் அதிக உற்சாகமாக இல்லை, என்றார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
ஆன்மிகம்
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
உருளைக்கிழங்கு டோனட்17 hours 59 min ago |
க்ரஞ்சி சிக்கன் ஸ்டிக்ஸ்4 days 18 hours ago |
சூப்பர் சாஃப்ட் இட்லி1 week 12 hours ago |
-
தங்கம் விலை மீண்டும் உயர்வு
24 Apr 2024சென்னை, சென்னையில் நேற்று ஆபரண தங்கம் விலை சவரனுக்கு ரூ.240 உயர்ந்து ரூ.53.840-க்கு விற்பனையானது.
-
பாகிஸ்தான் செல்லுமா இந்தியா?
24 Apr 2024சாம்பியன் டிராபி போட்டி பாகிஸ்தானில் நடப்பதால் இந்திய அணி அங்கு சென்று விளையாட வாய்ப்பு இல்லை என தகவல் வெளியாகி உள்ளது.
-
தனியார் பள்ளிகளில் இடஒதுக்கீடு நிறைவேற்றப்படுகிறதா? கண்காணிக்க அரசுக்கு செல்வப்பெருந்தகை கோரிக்கை
24 Apr 2024சென்னை, தமிழகத்தில் உள்ள பள்ளிகளில் கல்வி உரிமைச் சட்டப்படி தனியார் பள்ளிகளில் 25 சதவிகித இடஒதுக்கீடு முழுமையாக நிறைவேற்றப்படுகிறதா என்பதை நாள்தோறும் கண்காணித்து உரிய த
-
பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்ன ஆகும்? இளையராஜா தரப்புக்கு உயர் நீதிமன்றம் கேள்வி
24 Apr 2024சென்னை, இளையராஜா பாடலை பயன்படுத்த விதித்த இடைக்கால தடையை நீக்கக்கோரி நிறுவனங்கள் தொடர்ந்த மேல்முறையீடு வழக்கில் பாடலுக்கு பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்ன ஆகும்? 
-
சுப்ரீம் கோர்ட் அறிவுறுத்தல் எதிரொலி: பெரிய அளவில் விளம்பரம் வெளியிட்டு மன்னிப்பு கோரியது பதஞ்சலி நிறுவனம்
24 Apr 2024புதுடெல்லி, சுப்ரீம் கோர்ட் அறிவுறுத்தலை அடுத்து 67 தேசிய செய்தித்தாள்களில் பெரிய அளவில் விளம்பரம் வெளியிட்டு நிபந்தனையற்ற பொதுமன்னிப்பு கோரியது பதஞ்சலி நிறுவனம்.
-
நாட்டின் கவனத்தை திசை திருப்புவதே பாஜக தலைவர்களின் பாணி: பிரியங்கா
24 Apr 2024திருவனந்தபுரம், உண்மையான பிரச்சினைகளில் இருந்து நாட்டின் கவனத்தை திசை திருப்புவதே பா.ஜ.க.
-
தேசிய பஞ்சாயத்து ராஜ் தினம்: கவர்னர் ஆர்.என்.ரவி வாழ்த்து
24 Apr 2024சென்னை, ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் 24-ம் தேதி தேசிய பஞ்சாயத்து ராஜ் தினம் கொண்டாடப்படுகிறது. அதன்படி நேற்று தேசிய பஞ்சாயத்து ராஜ் தினம் கொண்டாடப்பட்டது.
-
தீர்ப்பு தாமதம்: சுப்ரீம் கோர்ட்டில் ஹேமந்த் சோரன் மனு தாக்கல்
24 Apr 2024புது டெல்லி, பணமோசடி வழக்கில் அமலாக்கத் துறையின் கைது நடவடிக்கையை எதிர்த்து தாக்கல் செய்த மனு மீதான தீர்ப்பை ஐகோர்ட் தாமதப்படுத்துவதாகக் கூறி, ஜார்கண்ட் முன்னாள் முதல்
-
வண்டியூர் தேனூர் மண்டபத்தில் மண்டூக மகரிஷிக்கு சாப விமோசனம் அளித்த கள்ளழகர்: ராமராயர் மண்டகப்படியில் விடிய, விடிய தசாவதாரம்
24 Apr 2024மதுரை, வண்டியூர் தேனூர் மண்டபத்தில் கருட வாகனத்தில் எழுந்தருளிய கள்ளழகர் அங்கு மண்டூக முனிவருக்கு சாப விமோசனம் அளித்தார்.
-
போர் தொடங்கியதில் இருந்து தற்போது வரை உக்ரைனில் 5 லட்சம் ராணுவ வீரர்கள் உயிரிழப்பு: ரஷ்யா
24 Apr 2024மாஸ்கோ, போர் தொடங்கியதில் இருந்து தற்போது வரை 5 லட்சம் ராணுவ வீரர்களை உக்ரைன் இழந்துள்ளதாக ரஷ்யா தெரிவித்துள்ளது
-
கஷ்டப்பட்டு உழைத்து சேர்த்த உங்கள் செல்வத்தை காங்கிரஸ் பறித்துவிடும்: சத்தீஷ்கரில் பிரதமர் மோடி பேச்சு
24 Apr 2024புதுடெல்லி, நீங்கள் கஷ்டப்பட்டு உழைத்து சேர்த்த செல்வத்தை உங்கள் பிள்ளைகள் பெறமாட்டார்கள், அதை காங்கிரஸ் கட்சி பறித்துவிடும் என்று சத்தீஷ்கர் மாநிலத்தில் நடந்த கூட்டத்த
-
இன்டியா கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து வடமாநிலங்களில் தேர்தல் பிரசாரம் செய்ய முதல்வர் ஸ்டாலின் திட்டம்
24 Apr 2024சென்னை, இன்டியா கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து டெல்லி உள்ளிட்ட மாநிலங்களுக்கு சென்று முதல்வர் மு.க.ஸ்டாலின் பிரசாரம் செய்ய திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
-
வி.வி.பாட் வழக்கில் தேர்தல் ஆணையம் விளக்கம்:தேதி குறிப்பிடாமல் தீர்ப்பை ஒத்திவைத்தது சுப்ரீம் கோர்ட்
24 Apr 2024புதுடெல்லி:வி.வி.பாட் தொடர்பான வழக்கில் தேர்தல் ஆணையம் விளக்கமளித்ததை அடுத்து தேதி குறிப்பிடாமல் தீர்ப்பை சுப்ரீம் கோர்ட் ஒத்திவைத்தது.
-
ஸ்மோக்கிங் பிஸ்கட்டை உட்கொள்ள வேண்டாம்: மாநில உணவு பாதுகாப்புத்துறை எச்சரிக்கை
24 Apr 2024சென்னை, ஸ்மோக்கிங் பிஸ்கட்டை உட்கொள்ள வேண்டாம் என மாநில உணவு பாதுகாப்புத் துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
-
நீர்மட்டம் தொடர் சரிவு: மேட்டூர் அணை பகுதியில் வெளியே தெரியும் நந்தி சிலை, தேவாலயம்
24 Apr 2024சேலம், மேட்டூர் அணையின் நீர்மட்டம் தொடர்ந்து சரிந்து வருவதால் நந்தி சிலை, கிறிஸ்தவ தேவாலயம் முழுவதும் வெளியே தெரிகிறது.
-
நாளை தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் மணிப்பூரில் அடுத்தடுத்து குண்டுவெடிப்பு சம்பவம்
24 Apr 2024இம்பால், மணிப்பூரின் 2ம் கட்ட தேர்தல் நாளை நடைபெறவுள்ள நிலையில், அங்கு குண்டு வெடிப்பு சம்பவம் நிகழ்ந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
-
மஞ்சுமெல் பாய்ஸ் பட நடிகரை கரம் பிடித்தார் அபர்ணா தாஸ்
24 Apr 2024திருவனந்தபுரம், கேரள மாநிலம், வடக்கஞ்சேரியில் மஞ்சுமெல் பாய்ஸ் பட நடிகர் தீபக் பரம்போல்,நடிகை அபர்ணாதாஸ் ஆகியோரது திருமணம் நேற்று நடைபெற்றது.
-
தமிழ்நாட்டில் ஈரோடு, சேலம் உள்ளிட்ட 15 மாவட்டங்களுக்கு வெப்ப அலைக்கான மஞ்சள் அலர்ட் வட உள்மாவட்டங்களில் 5 டிகிரி வரை வெப்பம் உயரும்
24 Apr 2024புதுடில்லி, ஏப். 25- தமிழகத்தில் ஈரோடு, சேலம் உட்பட 15 மாவட்டங்களுக்கு வெப்ப அலைக்கான மஞ்சள் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.
-
செல்போன் டவரில் ஏறி தமிழக விவசாயிகள் திடீர் போராட்டம் : தலைநகர் டெல்லியில் பரபரப்பு
24 Apr 2024புதுடெல்லி, டெல்லி ஜந்தர் மந்தரில் செல்போன் டவர், மரத்தின் மீது ஏறி தமிழ்நாட்டை சார்ந்த விவசாயிகள் போராட்டம் நடத்தியதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
-
கிர்கிஸ்தானில் நீர் வீழ்ச்சியில் விழுந்து இந்திய மாணவர் பலி
24 Apr 2024கிர்கிஸ்தான், கிர்கிஸ்தானில் உள்ள நீர்வீழ்ச்சியில் விழுந்து ஆந்திர மாணவர் பலியானார்.
-
கேரளாவில் சக்திவாய்ந்த வெடிகுண்டுகள் கண்டெடுப்பு
24 Apr 2024திருவனந்தபுரம், கேரள மாநிலம், கண்ணூர் மாவட்டம் மட்டன்னூரில் உள்ள ஒரு வயலில் சக்திவாய்ந்த வெடிகுண்டுகள் கண்டெடுக்கப்பட்டுள்ளது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வரு
-
இட ஒதுக்கீட்டை அதிகரிக்க இண்டியா கூட்டணி நடவடிக்கை எடுக்கும்: முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிக்கை
24 Apr 2024சென்னை, ஓ.பி.சி., எஸ்.சி./எஸ்.டி. மக்களின் இட ஒதுக்கீட்டை அதிகரிக்க இண்டியா கூட்டணி நடவடிக்கை எடுக்கும் என முதல்வர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
-
விமான பயணத்தின்போது பெற்றோருக்கு அருகிலேயே குழந்தைகளுக்கு இருக்கை டி.ஜி.சி.ஏ. புதிய உத்தரவு
24 Apr 2024புதுடெல்லி, விமானங்களில் 12 வயது வரையுள்ள குழந்தைகளுக்கு அவர்களின் பெற்றோர் ஒருவருடன் இருக்கை ஒதுக்க வேண்டும் என்று விமான நிறுவனங்களுக்கு விமான போக்குவரத்து தலைமை இயக்க
-
இந்திய வம்சாவளியை சேர்ந்தவர்: 3-வது முறையாக விண்வெளிக்கு செல்கிறார் சுனிதா வில்லியம்ஸ்
24 Apr 2024வாஷிங்டன், பூமி உள்ளிட்ட பிற கிரகங்களை ஆய்வு செய்வதற்காக ரஷியா, அமெரிக்க உள்ளிட்ட நாடுகள் விண்வெளியில் சர்வதேச விண்வெளி மையத்தை அமைத்துள்ளன.
-
தென் தமிழகத்தில் இன்று லேசான மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை மையம் தகவல்
24 Apr 2024சென்னை, தென் தமிழகத்தில் இன்று ஓரிரு இடங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.