முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

காங். மூத்த தலைவர்கள் ரன்தீப் சிங், திக்விஜய சிங்குக்கு கொரோனா

வெள்ளிக்கிழமை, 16 ஏப்ரல் 2021      இந்தியா
Image Unavailable

காங்கிரஸ் மூத்த தலைவர்கள் ரன்தீப் சிங் சுர்ஜேவாலா மற்றும் திக்விஜய சிங் ஆகியோருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்தியாவில் அதிகரித்து வரும் கொரோனா பாதிப்பில் பல்வேறு அரசியல் தலைவர்களும் சிக்கி வருகின்றனர். சமீபத்தில் உ.பி., முதல்வர் யோகி ஆதித்யநாத்துக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டது. இந்நிலையில், காங்கிரஸ் கட்சியின் தலைமை செய்தித் தொடர்பாளர் ரன்தீப் சிங் சுர்ஜேவாலா தனக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளதாக தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். கடந்த 5 நாட்களில் தன்னுடன் தொடர்பில் இருந்தவர்கள் பரிசோதனை செய்து கொண்டு தனிமைப்படுத்திக் கொள்ளுமாறும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

அதே போல் மத்தியப்பிரதேச முன்னாள் முதல்வரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான திக்விஜய சிங்கும் தனக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக டுவிட்டரில் தெரிவித்துள்ளார். மேலும் டில்லியில் உள்ள தனது இல்லத்தில் தனிமைப்படுத்திக் கொண்டதாகவும், தன்னுடன் தொடர்பில் இருந்தவர்கள் விரைவாக பரிசோதனை செய்து கொண்டு தனிமைப்படுத்திக் கொள்ளுமாறும் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து