முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நீரவ் மோடியை இந்தியாவுக்கு நாடு கடத்த பிரிட்டன் அனுமதி

வெள்ளிக்கிழமை, 16 ஏப்ரல் 2021      உலகம்
Image Unavailable

வங்கிகளில் 14 ஆயிரம் கோடி அளவுக்கு கடன் பெற்று மோசடி செய்த வழக்கில் வைர வியாபாரி நீரவ் மோடியை இந்தியாவுக்கு நாடு கடத்த பிரிட்டன் அரசு அனுமதி அளித்துள்ளது. லண்டன் நீதிமன்றம் கடந்த பிப்ரவரி மாதம் உத்தரவு பிறப்பிப்பித்திருந்த நிலையில், பிரிட்டன் உள்துறை அமைச்சகம் நேற்று அனுமதி அளித்துள்ளது.

வைர வியாபாரியான நீரவ் மோடி, பஞ்சாப் நேஷனல் வங்கியில் ரூ.14,000 கோடி கடன் வாங்கி விட்டு திருப்பிச் செலுத்தாமல் கடந்த 2019-ம் ஆண்டு ஜனவரியில் பிரிட்டனுக்குத் தப்பிச் சென்றாா். இந்த முறைகேடு தொடா்பாக சி.பி.ஐ.யும் அமலாக்கத் துறையும் தனித்தனியாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றன. 

இதனிடையே, இந்தியாவிலிருந்து தப்பிச் சென்று மேற்கிந்திய தீவு நாடொன்றில் அவா் தஞ்சம் புகுந்தாா். இந்திய அரசின் நெருக்கடி காரணமாக, அங்கிருந்து வெளியேறி பிரிட்டன் வந்தாா். தலைநகா் லண்டனில் தலைமறைவாக இருந்த நீரவ் மோடியை ஸ்காட்லாந்து போலீஸாா் கடந்த 2019-ம் ஆண்டு மாா்ச் மாதம் கைது செய்தனா். பின்னா், தென்மேற்கு லண்டனில் உள்ள வான்ட்ஸ்வொா்த் சிறையில் அடைக்கப்பட்டாா். அவரை இந்தியாவுக்கு நாடு கடத்தி வருவதற்கான முயற்சிகளை அமலாக்கத் துறையும், சி.பி.ஐ.யும் மேற்கொண்டுள்ளன. இதற்காக, அங்குள்ள வெஸ்ட்மின்ஸ்டா் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் அமலாக்கத் துறை வழக்கு தொடுத்தது. இந்த வழக்கின் இறுதிகட்ட வாதங்கள் நிறைவடைந்து, பிப்ரவரி 25-ம் தேதி தீர்ப்பளிக்கப்பட்டது. நீரவ் மோடி சிறையில் இருந்தபடி காணொலி முறையில் ஆஜரானாா். அப்போது பிறப்பிக்கப்பட்ட தீர்ப்பில், பஞ்சாப் நேஷனல் வங்கியில் கடன் மோசடி செய்வதற்கு நீரவ் மோடி சதித் திட்டம் தீட்டியதில், அவா் குற்றவாளியாக அறிவிக்கப்படுவதற்கு போதிய ஆதாரங்கள் கிடைத்துள்ளன. அவா் மீது சி.பி.ஐ.யும் அமலாக்கத் துறையும் சுமத்திய குற்றச்சாட்டுகள் சந்தேகத்துக்கு இடமின்றி நிரூபணமாகின்றன. இந்திய விசாரணை அமைப்புகள் உறுதியளித்தபடி தனக்கு மருத்துவ சிகிச்சைகள் கிடைக்காது என்று நீரவ் மோடி கூறும் வாதத்தை ஏற்க முடியாது. அவா் மீதான வழக்குகளில் இந்திய நீதிமன்றங்களில் விசாரணைக்கு ஆஜராகி பதிலளிக்க வேண்டும் என்று நீதிபதி தீா்ப்பில் தெரிவித்திருந்தார்.  பிரிட்டனின் நாடு கடத்தல் விதிகள்படி, நீதிபதி தனது உத்தரவை பிரிட்டன் உள்துறை அமைச்சா் பிரீத்தி படேலுக்கு அனுப்பி வைப்பாா். அந்த உத்தரவு மீது 2 மாதங்களுக்குள் அமைச்சா் முடிவெடுப்பாா். அதன் பிறகு நீரவ் மோடியை இந்தியாவுக்கு நாடு நடத்துவதற்கான நடவடிக்கைகள் தொடங்கும். அதன்படி, நீதிபதியின் உத்தரவை ஏற்று நீரவ் மோடியை இந்தியாவுக்கு நாடு கடத்த பிரிட்டன் உள்துறை அமைச்சா் நேற்று ஒப்புதல் அளித்துள்ளார். அதேவேளையில், நாடு கடத்தும் உத்தரவை எதிர்த்து பிரிட்டன் உச்ச நீதிமன்றத்தில் நீரவ் மோடி மேல்முறையீடு செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago
View all comments

வாசகர் கருத்து