முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

எதிர்கட்சிகள் தடுப்பூசிகளுக்கு தட்டுப்பாடு என்ற பதற்றத்தை உருவாக்குவதா? - தமிழக பா.ஜ.க. கண்டனம்

வெள்ளிக்கிழமை, 16 ஏப்ரல் 2021      தமிழகம்
Image Unavailable

Source: provided

சென்னை : காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்கட்சிகள் தடுப்பூசிகளுக்கு தட்டுப்பாடு என்ற பதற்றத்தை உருவாக்குவதா? என்று தமிழக பா.ஜ.க. கண்டனம் தொரிவித்துள்ளது.

தமிழக பா.ஜ.க. செய்தி தொடர்பாளர் நாராயணன் திருப்பதி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:- 

இந்தியாவில் 12 கோடி தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன. உலகிலேயே நாள்தோறும் தடுப்பூசிகளை செலுத்திக் கொள்வோர் இந்தியாவிலேயே அதிகம். நம் நாட்டில் அதிகபட்சமாக மராட்டியத்தில் 1 கோடியே 11 லட்சத்து 19 ஆயிரத்து 18 பேர் தடுப்பூசி செலுத்தியுள்ளனர். ஆனால் தட்டுப்பாடு உள்ளதாக குற்றஞ்சாட்டுகிறது எதிர்கட்சிகள். 

மாநிலங்களின் வேண்டுகோளுக்கிணங்க, மத்திய அரசு தடுப்பூசிகளை அனுப்பி வைக்கும் நிலையில், காங்கிரஸ் மற்றும் எதிர்கட்சிகள் தடுப்பூசிகளுக்கு தட்டுப்பாடு உள்ளதாக மக்கள் மத்தியில் பதற்றத்தை உருவாக்குவது வன்மையாக கண்டிக்கத்தக்கது. 

இக்கட்டான சூழ்நிலையில் மத்திய-மாநில அரசுகளின் மக்கள் நலன் காக்கும் முயற்சிகளுக்கு முட்டுக்கட்டை போடுவது எதிர்கட்சிகளின் மலிவான அரசியல் மட்டுமல்ல, மக்கள் விரோத செயலும் கூட. 

இவ்வாறு அவர் அதில் தெரிவித்துள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து